Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

எங்களுடன் கூட்டணி அமைக்க அதிமுக விரும்புகிறது: காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை..!

Selvaperundagai

Siva

, ஞாயிறு, 25 பிப்ரவரி 2024 (14:43 IST)
எங்களுடன் கூட்டணி அமைக்க அதிமுக விரும்புகிறது என சமீபத்தில் தமிழக காங்கிரஸ் தலைவராக பதவியேற்ற செல்வப் பெருந்தகை பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். 
 
திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சிக்கு ஐந்து தொகுதிகள் மட்டுமே தரப்படும் என்ற பேச்சு வார்த்தையை நடைபெற்றதாக கூறப்படும் நிலையில் காங்கிரஸ் அதிருப்தியாக இருப்பதாக கூறப்படுகிறது. 
 
இந்த நிலையில் சமீபத்தில் பேட்டி அளித்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை அதிமுக எங்களுடன் கூட்டணி அமைக்க விரும்புவதாகவும் இதை முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தன்னிடம் நேரடியாகவே கூறியதாகவும் தெரிவித்துள்ளார். 
ஆனால் அதே நேரத்தில் திமுகவுடன் நாங்கள் தோழமையுடன் இருக்கிறோம் என்றும் நட்புடன் இருப்பதால் இந்த கூட்டணியில் இருந்து நாங்கள் வெளியேற வாய்ப்பு இல்லை என்றும் தெரிவித்தார். 
 
ஆனால் அதே நேரத்தில் திமுக போதுமான தொகுதிகளை ஒதுக்காவிட்டால் காங்கிரஸ், அதிமுக கூட்டணிக்கு செல்ல வாய்ப்பு இருப்பதாகவும் அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
 
Edited by Siva

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஒரே ஒரு தொகுதி தான்.. திமுக கறார்.. கூட்டணியில் இருந்து வெளியேறுகிறதா மதிமுக?