Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பீதியில் ஓபிஎஸ் - ஈபிஎஸ் ? அவசர ஆலோசனைக்கு அவசியம் என்ன??

பீதியில் ஓபிஎஸ் - ஈபிஎஸ் ? அவசர ஆலோசனைக்கு அவசியம் என்ன??
, சனி, 6 பிப்ரவரி 2021 (08:41 IST)
இன்று மாலை 5 மணிக்கு கட்சி நிர்வாகிகளுடன் ஓபிஎஸ்-ஈபிஎஸ் ஆலோசனை. 

 
சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்று பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையில் தண்டனையை வகித்து வந்த சசிகலா கடந்த மாதம் 27 ஆம் தேதி விடுதலை ஆனார் என்பது தெரிந்ததே. தற்போது பெங்களூரில் ஓய்வு எடுத்து வரும் அவர் வரும் 8 ஆம் தேதி சென்னை வருகிறார். 
 
சசிகலா வருகையை வரவேற்கும் விதமாக அதிமுகவை சேர்ந்த சிலரே போஸ்டர்களை ஒட்டி கொண்டாடி வருகின்றனர். இதனால் சிலரை கட்சியை விட்டு நீக்கும் பணியில் ஈடுப்பட்டுள்ளனர் அதிமுகவின் தலைவர்கள். 
 
இந்நிலையில், இன்று மாலை 5 மணிக்கு அதிமுக தலைமை அலுவலகத்தில் மாவட்ட செயலாளர்கள், அமைச்சர்களுடன் ஓபிஎஸ் - ஈபிஎஸ் ஆலோசனை நடத்துகின்றனர். சசிகலா வரும் வேலையில் அதிமுக ஆலோசனை கூட்டம் நடத்துவது தமிழக அரசியலில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கொரோனா தாக்கத்தால் குறைந்த ரத்த தானம்… ரோட்டரி கிளப் நடத்தும் முகாம்களுக்கு அழைப்பு!