Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தேர்தல் அதிகாரியை தாக்கிய அதிமுகவினர்! – கடலூரில் பரபரப்பு!

தேர்தல் அதிகாரியை தாக்கிய அதிமுகவினர்! – கடலூரில் பரபரப்பு!
, வெள்ளி, 20 டிசம்பர் 2019 (12:18 IST)
உள்ளாட்சி தேர்தலுக்கான பணிகள் தமிழகத்தில் பரபரப்பாக நடைபெற்று வரும் சூழலில் அதிமுகவினர் கடலூர் தேர்தல் அதிகாரியை தாக்கியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தின் ஊராட்சி அமைப்புகளுக்கான உள்ளாட்சி தேர்தல் எதிர்வரும் 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. தேர்தலுக்கான மேட்புமனுக்கள் தாக்கல் செய்வது முடிவடைந்த நிலையில் பரிசீலனை பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் உள்ளாட்சி தேர்தல் வேட்பாளர்களுக்கு சின்னம் வழங்கப்பட்டதில் கடலூர் மாவட்ட தேர்தல் அதிகாரி பாரபட்சம் காட்டியதாக கூறப்படுகிறது. இது குறித்து அதிமுகவினர் சிலர் தேர்தல் அதிகாரியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். வாக்குவாதத்தில் தேர்தல் அதிகாரியை அதிமுகவினர் தாக்கியதாக வீடியோக்கள் வெளியாகியுள்ளன.

உள்ளாட்சி தேர்தல் நடைபெற 7 நாட்களே உள்ள நிலையில் திடீரென நடைபெற்ற இந்த வன்முறை சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

காஷ்மீர் பணியில் சிக்கி தவிக்கும் 900 தமிழக லாரி டிரைவர்கள்