Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மின்வெட்டு தொடர்பாக காரச்சார விவாதம்! – அதிமுக வெளிநடப்பு!

Webdunia
வெள்ளி, 22 ஏப்ரல் 2022 (12:31 IST)
தமிழக சட்டமன்றத்தில் மின்வெட்டு தொடர்பாக ஏற்படுத்தப்பட்ட கவன ஈர்ப்பு தீர்மானத்தில் அளித்த விளக்கத்தை ஏற்க மறுத்தி அதிமுக வெளிநடப்பு செய்துள்ளது.

தமிழக சட்டமன்ற கூட்டத்தொடர் நடந்து வரும் நிலையில் மின்வெட்டு தொடர்பாக சட்டமன்றத்தில் அதிமுக கவன ஈர்ப்பு தீர்மானத்தை நிறைவேற்றியது.

இதற்கு பதிலளித்து பேசிய மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி “கடந்த 18-ஆம் தேதி  தமிழகத்தின் ஒருநாள் மின் நுகர்வு 317 மில்லியன் யூனிட்டாக இருந்த நிலையில் நேற்று 363 மில்லியன் யூனிட்டாக உயர்ந்துள்ளது. குறுகிய கால ஒப்பந்த மூலம் 3,000 யூனிட் மின்சாரத்தை தனியார் நிறுவனங்களில் இருந்து கொள்முதல் செய்து வருகிறோம்.

தமிழ்நாட்டில் நாள் ஒன்றுக்கு 72 ஆயிரம் டன் நிலக்கரி தேவையாக உள்ளது. ஆனால், மத்திய அரசு கடைசியாக நாள் ஒன்றுக்கு 32 ஆயிரம் டன் நிலக்கரியை மட்டுமே அளித்தது. இதுவே மின்வெட்டுக்கு முக்கிய காரணம்” என்று தெரிவித்துள்ளார்.

ஆனால் அமைச்சர் செந்தில் பாலாஜியின் இந்த பதிலை ஏற்க மறுத்த அதிமுகவினர் சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

Operation Mahadev: சுட்டுக்கொல்லப்பட்ட தீவிரவாதிகள் யார்? இந்தியாவில் அவர்கள் செய்த நாசவேலை!

இந்தியப் பங்குச்சந்தை 3-வது நாளாக சரிவு: சென்செக்ஸ், நிஃப்டி வீழ்ச்சி!

பெற்றோர் பெயருடன் நாய்க்கு இருப்பிட சான்று.. அதிகாரிகளின் அலட்சியத்தால் பரபரப்பு..!

ஆன்லைனில் தூக்க மாத்திரை வாங்க முயற்சித்த மூதாட்டி.. ரூ.77 லட்சம் இழந்த பரிதாபம்..!

HIV தொற்றால் பாதிக்கப்பட்ட இளைஞர்.. கெளரவத்தை காப்பாற்ற குடும்ப உறுப்பினர்களே கொலை செய்தார்களா?

அடுத்த கட்டுரையில்
Show comments