Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கலைஞருக்கு அஞ்சலி செலுத்திய அதிமுக பிரமுகர் – திமுகவுக்கு தூதா ?

Webdunia
வியாழன், 8 ஆகஸ்ட் 2019 (09:35 IST)
கலைஞரின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலியை அடுத்து அவருக்கு அதிமுக முன்னாள் மாநிலங்களவை உறுப்பினர் மைத்ரேயன் அஞ்சலி செலுத்தியுள்ளார்.

அதிமுக சார்பாக 2014 முதல் 2019 வரை மாநிலங்களவை உறுப்பினராக இருந்தவர் மைத்ரேயன். கடந்த ஜூலையோடு இவரது பதவிக்காலம் முடிந்த நிலையில் அவருக்கு மீண்டும் பதவி அளிக்காதது குறித்து வருத்தம் தெரிவித்தார். இதனால் அவருக்கு அதிமுக தலைமை மேல் அதிருப்தி இருப்பதாகத் தெரிகிறது.

இந்நிலையில் திமுக முன்னாள் தலைவர் கலைஞரின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலியை அடுத்து அவருக்குப் பலரும் அஞ்சலில் செலுத்திய நிலையில் தனது முகநூலில் மைத்ரேயனும் அஞ்சலி செலுத்தியுள்ளார். அதில் ‘ஒன்றரை ஆண்டு இடைவெளியில் தமிழக அரசியலின் இருபெரும் அசைக்க முடியாத சக்திகள் நம்மை விட்டு எட்டாத தூரம் சென்று விட்டனர். அரசியல் களத்தில் எதிரெதிர் துருவங்களாக இருந்தாலும் அம்மா, கலைஞர் இருவரின் மறைவு தமிழக அரசியலில் மிகப்பெரிய வெற்றிடத்தை ஏற்படுத்தியது. அரசியலில் ஆயிரம் கருத்து வேறுபாடுகள் இருக்கலாம். அதையெல்லாம் ஒதுக்கி வைத்துவிட்டு இன்று கலைஞரின் முதலாம் ஆண்டு நினைவு நாளில் அவருக்கு எனது இதயபூர்வமான அஞ்சலி’ எனத் தெரிவித்துள்ளார்.

அதிமுக தலைமை மேல் அவர் அதிருப்தியில் இருந்தும் அவரைத் தலைமைக் கண்டுகொள்ளாததால் அவர் திமுக பக்கம் சாய விரும்புவதாகவும் அதனால்தான் இந்த அஞ்சலிக் குறிப்பு மூலம் தூது விடுவதாகவும் அரசியல் வட்டாரத்தில் சலசலப்பு எழுந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தேர்தலில் திமுகவை என்னால் தோற்கடிக்க முடியாது.. ஆனால்? - மதுரையில் அமித்ஷா பேச்சு!

அளந்து விடுவதில் ஆஸ்கரே தரலாம்.. பாகிஸ்தானின் பொய் மூட்டையை கட்டவிழ்த்த செயற்கைக்கோள் படங்கள்!

200 தொகுதிகளில் வெற்றி என்று ஸ்டாலின் கூறுவது பகல் கனவு.. ஈபிஎஸ் பேட்டி

நடுரோட்டில் சீன் காட்டிய இளைஞர். பைக்கை பிடுங்கி பழைய இரும்பு கடைக்கு போட்ட காவல்துறை..!

அரசியலும், கிரிக்கெட்டும் சங்கமித்தது..! நாடாளுமன்ற எம்.பியை கரம் பிடித்த ரிங்கு சிங்!

அடுத்த கட்டுரையில்
Show comments