பாஜகவுடன் கூட்டணியால் அதிருப்தி.. அதிமுக பிரமுகர் கட்சியில் இருந்து விலகல்..!

Mahendran
திங்கள், 14 ஏப்ரல் 2025 (19:28 IST)
2026ஆம் ஆண்டு தமிழகம் சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்கிறது. இத்தேர்தலில், அதிமுக தலைமையிலான என்டிஏ கூட்டணி களமிறங்கும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சில தினங்களுக்கு முன் அறிவித்திருந்தார். இந்த அறிவிப்பு, அதிமுகவிற்குள் மறைமுக அதிர்வலைகளை உருவாக்கியுள்ளதாக கூறப்படுகிறது.
 
இந்நிலையில், புதுக்கோட்டையை சேர்ந்த அதிமுக சிறுபான்மை அணியின் நகரச் செயலாளராக இருந்த கே.எஸ். முகமது கனி, தனது பதவியிலிருந்து ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார்.
 
பாஜகவுடன் அதிமுக இணைந்திருப்பதை கடுமையாக எதிர்த்து, அதிமுகவிலிருந்து விலகுவதாகவும் அவர் தெரிவித்து இருக்கிறார். கட்சியின் முன்னணி தலைவர்கள் எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதாவை நேர்மையான வழிகாட்டிகளாக நினைக்கும் தனக்கே, தற்போதைய கூட்டணி ஏற்க முடியாதது எனக் கூறி, முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் அவர் இதைத் தெளிவாக எழுதியுள்ளார்.
 
அத்துடன், நகர சிறுபான்மை பிரிவு செயலாளர் பதவியிலும் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்தும் விலகுவதாகவும் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தவெகவில் இருக்கும் சிக்கல்!.. சமாளிப்பாரா செங்கோட்டையன்!.. ஒரு பார்வை...

திருமணத்திற்கு மறுத்த ஆசிரியை வெட்டி கொலை.. சட்டம் - ஒழுங்கை காப்பாற்றுங்கள்: அன்புமணி கோரிக்கை

4 ஆண்டுகளாக பங்குச்சந்தையில் வர்த்தகம்.. ரூ.35 கோடி ஏமாந்த 72 வயது முதியவர்..!

'டிக்வா' புயல் எச்சரிக்கை: நாளை 4 மாவட்டங்களுக்கு அதி கனமழைக்கான 'ரெட் அலர்ட்'!

செங்கோட்டையனை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்: விஜய் வெளியிட்ட அறிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments