Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அதிமுக முன்னாள் அமைச்சரை வரவேற்று பேனர்.. திருச்சி மாவட்ட விளையாட்டு அலுவலர் சஸ்பெண்ட்..!

Mahendran
திங்கள், 10 ஜூன் 2024 (13:00 IST)
அதிமுக முன்னாள் அமைச்சரை வரவேற்று பேனர் வைத்த திருச்சி மாவட்ட விளையாட்டு அலுவலர் வேல்முருகன் அதிரடி சஸ்பெண்ட் செய்யப்பட்டிருப்பதாக திருச்சி மாவட்ட நிர்வாகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
 
திருச்சி அண்ணா விளையாட்டு அரங்கில், மாநில அளவிலான தடகளப் போட்டி நடந்தது. இதில் அதிமுக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கரை வரவேற்று அண்ணா விளையாட்டு அரங்கில் பேனர்கள் வைக்கப்பட்டிருந்தன.
 
இந்த சம்பவத்தின் காரணமாக, திருச்சி மாவட்ட விளையாட்டு அதிகாரி வேல்முருகன் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாக தகவல்  வெளியாகியுள்ளது. அவருக்கு பதிலாக விடுதி காப்பாளர் கண்ணன் பொறுப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
முன்னாள் அமைச்சர் சி விஜயபாஸ்கருக்கு பேனர் வைத்த தகவல் அமைச்சர் கேஎன் நேருவுக்கு தகவல் சென்றதாகவும், இதையடுத்தே இந்த சஸ்பெண்ட் நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாகிஸ்தானுக்கு உளவு பார்த்தார்களா தமிழக யூடியூபர்கள்.. விசாரணை செய்ய வாய்ப்பு..!

கடை திறப்பது மட்டும் தான் ஓனரின் வேலை.. வாடிக்கையாளர்களே டீ போட்டு குடிக்கும் டீக்கடை..!

இன்று இரவு 7 மாவட்டங்களில் கொட்டப்போகுது கனமழை.. முன்னெச்சரிக்கை அறிவிப்பு..!

பஹல்காமில் தாக்கியவர்களை இன்னும் ஏன் பிடிக்கவில்லை. காங்கிரஸ் கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் திணறும் பாஜக..!

டேபிளுக்கு அடியில் காலை பிடிக்கும் பழக்கம் எனக்கு இல்லை: ஈபிஎஸ்க்கு பதிலடி கொடுத்த முதல்வர் ஸ்டாலின்..!

அடுத்த கட்டுரையில்
Show comments