Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சென்னை ரவுடி ஆற்காடு சுரேஷ் கொலை வழக்கு.. கைதான 2 அதிமுகவினர் கட்சியில் இருந்து நீக்கம்..!

ADMK
, திங்கள், 4 செப்டம்பர் 2023 (12:20 IST)
சென்னையில் பிரபல ரவுடி ஆற்காடு சுரேஷ் வெட்டி கொலை செய்யப்பட்ட வழக்கில் அதிமுக நிர்வாகிகள் இருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அந்த இருவரையும் கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி நீக்கி உள்ளார். 
 
இதுகுறித்து அவர் மேலும் கூறியிருப்பதாவது: கழகத்தின் கொள்கை மற்றும் குறிக்கோளுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும் கழக கட்டுப்பாட்டை மீறி கழகத்திற்கு கழகமும் அவ பெயரும் உண்டாக்கும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும் சென்னை வடக்கு மாவட்டத்தை சேர்ந்த ஜானு கென்னடி  மற்றும்  சுதாகர் பிரசாத் ஆகியோர் இன்று முதல் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உள்பட அனைத்து பொறுப்புகளில் இருந்து நீக்கி வைக்கப்படுகிறார்கள். 
 
கழக உடன்பிறப்புகள் யாரும் இவர்களுடன் எந்தவித தொடர்பும் வைத்துக்கொள்ளக்கூடாது என கேட்டுக்கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்
 
Edited by Siva

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இந்தியாவில் சாதி எதிர்ப்பு என்பது அம்பேத்கர் காலத்தில் தொடங்கியது: திருமாவளவன்