Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கும்பலோடு வேட்புமனு தாக்கல்! – ஸ்ரீரங்கம் அதிமுக வேட்பாளர் மீது வழக்கு!

Webdunia
புதன், 17 மார்ச் 2021 (10:32 IST)
தமிழக சட்டமன்ற தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்த அதிமுக வேட்பாளர் தேர்தல் விதிமுறைகளை மீறியதாக வழக்கு தொடரப்பட்டுள்ளது.

தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6ல் நடைபெற உள்ள நிலையில் வேட்புமனு தாக்கல் தொடங்கி நடந்து வருகிறது. இந்நிலையில் ஸ்ரீரங்கம் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் கு.ப.கிருஷ்ணன் நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார்.

கொரோனா காரணமாக வேட்புமனு தாக்கல் செய்ய வேட்பாளருடன் இருவர் மட்டுமே செல்ல அனுமதிக்கப்பட்ட நிலையில் கு.ப.கிருஷ்ணன் கும்பலை அழைத்துக் கொண்டு சென்றதாகவும், இதனால் தேர்தல் அதிகாரிகளின் பணியில் இடையூறு ஏற்பட்டதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால் தேர்தல் நடத்தைகளை மீறியதாக கு.ப.கிருஷ்ணன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments