Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உலகின் மாசடைந்த 30 நகரங்களில் 22 இந்தியாவில்..! – அதிர்ச்சி ரிப்போர்ட்!

Webdunia
புதன், 17 மார்ச் 2021 (10:19 IST)
உலகின் மிகவும் மாசுபாடு அடைந்த நகரங்கள் குறித்த ஆய்வில் பெரும்பான்மையான நகரங்கள் இந்தியாவில் உள்ளதாக வெளியான முடிவுகள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உலகம் முழுவதும் பல்வேறு காரணங்களால் சுற்றுசூழல் மாசுபாடு அடைந்து வரும் நிலையில் பருவநிலை மாற்றம் உள்ளிட்ட நிகழ்வுகள் வேகமாக நடந்து வருகின்றன. இந்நிலையில் சுற்றுசூழல் மாசுபாடு தொடர்பாக பல்வேறு நாடுகளும் பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றன.

இந்நிலையில் சுவிட்சர்லாந்தை சேர்ந்த ஐ.க்யூ.ஏர் என்ற நிறுவனம் உலகம் முழுவதும் காற்று மாசுபாடு உள்ளிட்டவற்றால் கடுமையாக பாதிக்கப்பட்ட நகரங்கள் குறித்த ஆய்வை மேற்கொண்டுள்ளது. இந்த ஆய்வில் அதிக மாசுபாடு கொண்ட 30 நகரங்கள் கண்டறியப்பட்ட நிலையில் அதில் 22 நகரங்கள் இந்தியாவில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மிக மோசமான சுற்றுசூழல் மாசு கொண்ட உலக தலைநகரங்களில் டெல்லி முதல் இடத்தில் உள்ளதாகவும் அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரே நாடு ஒரே கணவர் திட்டமா? பஞ்சாப் முதல்வர் ஆவேசம்..!

மதுரை சுங்கச்சாவடியில் கட்டணம் வசூலிக்க தடை: உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு.

உலக நாடுகளின் ஆதரவை பெற்றுள்ளோம்: சென்னை திரும்பிய கனிமொழி பேட்டி..!

நீட் மறு தேர்வு நடத்த முடியாது.. மத்திய அரசு வாதம்.. ஜூன் 6ஆம் தேதி தீர்ப்பு..!

யார் அந்த சார்? 8 கேள்விகள் கேட்ட நயினார் நாகேந்திரன்.. பதிலுக்காக காத்திருப்போம்!

அடுத்த கட்டுரையில்
Show comments