மதியத்திற்கு மேல் மாறிய மனசு; திமுகவுக்கு தாவிய அதிமுக வேட்பாளர்!

Webdunia
ஞாயிறு, 6 பிப்ரவரி 2022 (09:16 IST)
தமிழக உள்ளாட்சி தேர்தலில் அதிமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டவர் கடைசி நேரத்தில் திமுகவிற்கு தாவியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழக நகர்புற உள்ளாட்சி தேர்தல் பிப்ரவரி 19ம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் நேற்று முன்தினம் நடந்து முடிந்த நிலையில் பல்வேறு கட்சி வேட்பாளர்களும், சுயேட்சை வேட்பாளர்களும் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.

இந்நிலையில் ஊத்துக்குளி பேரூராட்சிக்கு உட்பட்ட 12வது வார்டில் அதிமுக சார்பில் போட்டியிட அதிமுக முன்னாள் கவுன்சிலரான அண்ணாதுரை என்பவரை அதிமுக அறிவித்தது. நேற்று முன்தினம் வேட்புமனு தாக்கல் முடிய இருந்த நிலையில் மதியம் வரை அண்ணாதுரை வேட்புமனு தாக்கல் செய்யவே இல்லை. இதனால் அதிமுக மாவட்ட தலைமை உடனடியாக வேறு ஒருவரை வேட்புமனு தாக்கல் செய்ய வைத்துள்ளனர்.

இந்நிலையில் அன்று இரவு அதிமுகவிலிருந்து விலகிய அண்ணாதுரை திமுகவில் தன்னை இணைத்துக் கொண்டுள்ளார். வேட்பாளராக அறிவிக்கப்பட்ட அதிமுக பிரமுகர் திடீரென திமுக தாவியது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மக்கள் கஷ்டத்தில் இருக்காங்க!.. முதல்வர் தூங்குகிறார்.. கொந்தளித்த விஜய்

11 வருஷமா ஒன்னுமே கொடுக்கல!.. ரிசல்ட் தெரியும் போல!.. பாஜகவை விமர்சிக்கும் ஸ்டாலின்!...

இறப்பதற்கு சில நிமிடத்திற்கு முன் செல்போனில் பேசி அஜித் பவார்.. யாரிடம் பேசினார்?

செல்போனில் கேம் விளையாடியதை கண்டித்ததால் 3 சிறுமிகள் தற்கொலை!.. ஐயோ பாவம்!...

9வது மாடியில் இருந்து குதித்து ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 சிறுமிகள் தற்கொலை.. கடிதத்தில் என்ன இருந்தது?

அடுத்த கட்டுரையில்
Show comments