Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

நடிகை கஸ்தூரி ஜாமீன் கோரி மனு.. விரைவில் விசாரணை என தகவல்..!

Advertiesment
நடிகை கஸ்தூரி ஜாமீன் கோரி மனு.. விரைவில் விசாரணை என தகவல்..!

Mahendran

, திங்கள், 18 நவம்பர் 2024 (12:18 IST)
நடிகை கஸ்தூரி ஜாமீன் மனுவை சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளதாக தகவல் நிலையம் உள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன் சென்னையில் நடந்த ஆர்ப்பாட்டத்தின் போது தெலுங்கு பேசும் மக்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக கஸ்தூரி மீது வழக்கு தொடரப்பட்ட நிலையில், அவர் சமீபத்தில் கைது செய்யப்பட்டார்.

முன்னதாக அவரது முன்ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், தலைமறைவாக இருந்த அவரை தனிப்படைகள் அமைத்து சென்னை போலீசார் பிடித்து கைது செய்தது. இந்த நிலையில் நவம்பர் 29ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ள நிலையில், அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில், நடிகை கஸ்தூரி ஜாமீன் கோரி சென்னை எழும்பூர் உயர்நீதிமன்றத்தில் இன்று மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Edited by Mahendran

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அதிமுகவுடன் கூட்டணி என்பது முற்றிலும் தவறு: தவெக புஸ்ஸி ஆனந்த்