Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மன்னிப்பு கேட்டும் நடிகை கஸ்தூரி மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு! பரபரப்பு தகவல்..!

Siva
செவ்வாய், 5 நவம்பர் 2024 (20:44 IST)
நடிகை கஸ்தூரி தெலுங்கு மக்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக கூறப்பட்ட நிலையில், தனது சமூக வலைதளம் மூலம் அவர் தெலுங்கு மக்களிடம் மன்னிப்பு கேட்டார். இருப்பினும், அவர் மீது நான்கு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்து மக்கள் கட்சி சார்பில் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் நடிகை கஸ்தூரி கலந்து கொண்டு பேசும்போது, தெலுங்கு மக்களை பற்றி சர்ச்சைக்குரிய வகையில் பேசினார் என்று புகார் அளிக்கப்பட்டது. அதன் அடிப்படையில், சென்னை எழும்பூர் காவல் நிலையத்தில் அவர் மீது நான்கு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்த நிலையில் நடிகை கஸ்தூரி மன்னிப்பு கேட்டாலும், அதை ஏற்றுக்கொள்ள மாட்டோம் என்றும், அவர் நீதிமன்றத்தில் தான் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும், அவர் மீது காவல்துறை தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், அகில இந்திய தெலுங்கு  சம்மேளனம்  இயக்கத்தின் சார்பில் காவல் நிலையத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது.

இதனை அடுத்து மதம், இனம் குறித்து இருவேறு பிரிவு குறித்து மக்களிடையே பிரச்சனை ஏற்படுத்தும் நோக்கில் செயல்படுதல் உள்ளிட்ட நான்கு பிரிவுகளின் கீழ் எழும்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.


Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பெண்களின் சிந்தூரை அரசியலுக்கு பயன்படுத்துவதா? மம்தா, காங்கிரஸ் விமர்சனம்..!

நீட் முதுநிலை தேர்வை ஒரே ஷிப்டில் நடத்த வேண்டும்: நீதிமன்றம் உத்தரவு..!

பள்ளிகள் திறப்பு ஜூன் 9ஆம் தேதிக்கு தள்ளி போகிறதா? தமிழக அரசு விளக்கம்..!

ரூ.1.28 கோடி சம்பளம் பெற்றவர் இன்று உணவு டெலிவரி பாய்.. காரணம் AI.. அதிர்ச்சி தகவல்..!

தவறு செய்திருந்தால் மன்னிப்பு கேட்பேன், ஆனால்.. கமல்ஹாசன் பேச்சு..!

அடுத்த கட்டுரையில்
Show comments