Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நான் நன்றாக போராடுவேன். போராட எனக்கு ஒரு வாய்ப்பு கொடுங்கள்: பிரியங்கா காந்தி

Siva
செவ்வாய், 5 நவம்பர் 2024 (20:37 IST)
நான் நன்றாக போராடுவேன், அவ்வாறு உங்களுக்காக போராட எனக்கு ஒரு வாய்ப்பு கொடுங்கள் என வயநாடு தொகுதியில் பிரியங்கா காந்தி தேர்தல் பிரச்சாரம் செய்தார். அப்போது அவர் மேலும் பேசியதாவது:

"என் மகன் பள்ளியில் படித்துக் கொண்டிருந்த போது அடிக்கடி அவனை பார்க்கச் செல்வேன். ஆனால், பள்ளி முதல்வர் ஒருநாள் ‘நீங்கள் அடிக்கடி வர வேண்டாம், வருவதை குறைத்துக் கொள்ளுங்கள்’  என அவர் தெரிவித்தார். "அதைப்போல உங்களை நான் அடிக்கடி சந்திக்க வருவேன். நீங்களே என்னை ‘அடிக்கடி வர வேண்டாம், டெல்லியில் கொஞ்ச காலம் இருங்கள்’ என்று சொல்லும் அளவுக்கு, நான் அடிக்கடி வயநாடு தொகுதிக்கு வருவேன்.

ராகுல் காந்தி இங்கு எம்.பி. ஆக இருந்தபோதும், நீங்கள் அவருக்கு மிகவும் நன்றி உடையவராக இருந்தீர்கள். ராகுல் காந்தி தனியாக போராடிய போது, நீங்கள் அவருக்கு துணையாக இருந்தீர்கள்; அவருக்கு அன்பையும் ஆதரவையும் காட்டினீர்கள். தொடர்ந்து வலிமையாக போராடுவதற்கு தைரியத்தையும் அவருக்கு கொடுத்தீர்கள்.

அதுபோல, நானும் உங்களுக்காக போராட விரும்புகிறேன். எனக்கு ஒரு வாய்ப்பு கொடுங்கள்," என்று பிரியங்கா காந்தி தனது தேர்தல் பிரச்சாரத்தில் பேசினார்.


Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

Operation Mahadev: சுட்டுக்கொல்லப்பட்ட தீவிரவாதிகள் யார்? இந்தியாவில் அவர்கள் செய்த நாசவேலை!

இந்தியப் பங்குச்சந்தை 3-வது நாளாக சரிவு: சென்செக்ஸ், நிஃப்டி வீழ்ச்சி!

பெற்றோர் பெயருடன் நாய்க்கு இருப்பிட சான்று.. அதிகாரிகளின் அலட்சியத்தால் பரபரப்பு..!

ஆன்லைனில் தூக்க மாத்திரை வாங்க முயற்சித்த மூதாட்டி.. ரூ.77 லட்சம் இழந்த பரிதாபம்..!

HIV தொற்றால் பாதிக்கப்பட்ட இளைஞர்.. கெளரவத்தை காப்பாற்ற குடும்ப உறுப்பினர்களே கொலை செய்தார்களா?

அடுத்த கட்டுரையில்
Show comments