Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

முன்னாள் அமைச்சர் மணிகண்டன் வீட்டை முற்றுகையிட முயன்ற நடிகை சாந்தினி!

manikandan
, வெள்ளி, 14 அக்டோபர் 2022 (13:28 IST)
முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது பாலியல் குற்றச்சாட்டு கூறிய துணை நடிகை சாந்தினி திடீரென வழக்கை வாபஸ் பெற்ற நிலையில் தற்போது முன்னாள் அமைச்சர் மணிகண்டன் வீட்டை முற்றுகையிட முயற்சி செய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
முன்னாள் அமைச்சர் மணிகண்டன் தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றி விட்டதாக சென்னை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் துணை நடிகை சாந்தினி என்பவர் புகார் அளித்தார் 
 
இந்த புகாரின் அடிப்படையில் முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்யப்பட்டார். இந்த வழக்கு நீதிமன்றத்தில் நடந்து கொண்டிருந்த நிலையில் திடீரென சாந்தினி தனது வழக்கை வாபஸ் பெற்றார் 
 
இந்த நிலையில் தற்போது முன்னாள் அமைச்சர் மணிகண்டன் வீட்டை நடிகை சாந்தினி முற்றுகையிட முயன்றார். இதை அறிந்த காவல்துறையினர் அவரை தடுத்து நிறுத்தி சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்
 
வழக்கை வாபஸ் பெற்ற பின்னர் நடிகை சாந்தினி திடீரென மீண்டும் முன்னாள் அமைச்சர் வீட்டை முற்றுகையிட வந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
Edited by Siva

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மாணவிகள் முதல் மூதாட்டி வரை; மந்திரவாதி ஷபி நடத்திய கொடூரங்கள்!