Webdunia - Bharat's app for daily news and videos

Install App

போதை பொருள் விவகாரத்தில் நடிகர் ஸ்ரீகாந்த் கைது.. தமிழ் திரையுலகத்தினர் கலக்கம்..!

Mahendran
செவ்வாய், 24 ஜூன் 2025 (10:21 IST)
போதைப்பொருள் விவகாரத்தில் நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் நிலையில், தமிழ் திரையுலகில் பலர் கலக்கமடைந்திருப்பதாகவும், தங்கள் மீதும் விசாரணை வளையம் வருமோ என்ற அதிர்ச்சியில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
 
சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள ஒரு பாரில் இரு தரப்பினர் மோதி கொண்ட நிலையில், இது தொடர்பாக நுங்கம்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போதுதான், சர்வதேச போதைப்பொருள் கடத்தல் கும்பலுடன் அந்த பாரில் உள்ளவர்களுக்கு தொடர்பு இருப்பதும், அந்த பாரில் இருந்து போதைப்பொருள்களை பல தொழிலதிபர்கள் மற்றும் நடிகர்கள் வாங்கி வந்ததும் கண்டறியப்பட்டது.
 
முதற்கட்டமாக, இந்த பாரில் இருந்து போதைப்பொருள் வாங்கியதாக நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டார். அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும், நடிகர்கள் பங்கேற்கும் இரவு விருந்துகளுக்கும் இங்கிருந்துதான் போதைப்பொருள் சப்ளை செய்யப்பட்டதாக விசாரணைகளில் தெரிய வந்துள்ள நிலையில், மேலும் சில திரையுலகினர் சிக்குவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
இதனால், நடிகர் ஸ்ரீகாந்துக்கு நெருங்கிய நட்பில் உள்ள திரையுலகினரையும் போலீசார் சந்தேக வளையத்திற்குள் கொண்டு வந்திருப்பதாகவும், இன்னும் சில திரையுலகினரின் கைது நடவடிக்கை இருக்கலாம் என்று கூறப்படுவதால், தமிழ் திரையுலகினர் பெரும் கலக்கத்தில் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஈரானும், இஸ்ரேலும் போரை நிறுத்த சொல்லி கெஞ்சினாங்க! - ட்ரம்ப் மீண்டும் சர்ச்சை பேச்சு

அரவிந்த் கெஜ்ரிவாலின் கம்பேக்: இடைத்தேர்தல் வெற்றிகளால் தேசிய அரசியலுக்கு வருகிறாரா?

போர் நிறுத்தம் என டிரம்ப் அறிவிப்பு.. உச்சத்திற்கு செல்கிறது இந்திய பங்குச்சந்தை..!

24 சிறுமிகளுக்கு பாலியல் சீண்டல், துன்புறுத்தல்! கணித ஆசிரியர் போக்சோவில் கைது!

6 மாவட்டங்களில் காத்திருக்குது கனமழை! எந்தெந்த மாவட்டங்களில்?

அடுத்த கட்டுரையில்
Show comments