Webdunia - Bharat's app for daily news and videos

Install App

போதை பொருள் விவகாரத்தில் இன்னொரு தமிழ் ஹீரோவுக்கு தொடர்பா? சம்மன் அளிக்க திட்டம்..!

Mahendran
செவ்வாய், 24 ஜூன் 2025 (12:15 IST)
போதைப்பொருள் விவகாரத்தில் ஏற்கனவே நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், இன்னொரு தமிழ்த் திரைப்பட ஹீரோவுக்கும் தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது. அவருக்கு சம்மன் அனுப்பக் காவல்துறை திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
 
நடிகர் ஸ்ரீகாந்த் சட்டவிரோதமாக போதைப்பொருளை வாங்கி பயன்படுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்த விவகாரத்தில் மேலும் சில நடிகர், நடிகைகளுக்கு தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், போதைப்பொருள் விவகாரத்தில் நடிகர் கிருஷ்ணாவுக்கும் தொடர்பு என கூறப்படுவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
இதனை அடுத்து, போதைப்பொருள் பயன்படுத்திய புகாரில் நடிகர் கிருஷ்ணாவுக்கு சம்மன் அனுப்ப காவல்துறை திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. தற்போது நடிகர் கிருஷ்ணா கேரளாவில் உள்ள படப்பிடிப்புக்கு சென்றுள்ளதால், கேரளாவுக்கே சென்று அவருக்கு சம்மன் அளிக்க முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் திரையுலகில் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.

Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கணவனை அரிவாளால் வெட்டி கொலை செய்த மனைவி.. நீதிபதி அளித்த தண்டனை விவரம்..!

பாகிஸ்தானை அடுத்து வங்கதேசத்திற்கும் தண்ணீர் நிறுத்தமா? இந்தியா அதிரடி..!

இன்று ஒரே நாளில் 600 ரூபாய் குறைந்த தங்கம்.. இனி அதிகம் குறையும் என தகவல்..!

ராகுல் காந்தி அடிக்கடி ரகசிய வெளிநாட்டு பயணம் ஏன்? இப்போது அவர் எங்கிருக்கிறார்? பாஜக

இனி வரிசை தேவையில்லை.. டிஜிட்டல் முறையில் லட்டு பெறலாம்: திருப்பதி தேவஸ்தானம் அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments