Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நடிகர் பாக்யராஜ் கைதா... மகளிர் ஆணையம் அணுப்பி நோட்டீஸ் எதற்கு?

Webdunia
சனி, 30 நவம்பர் 2019 (11:38 IST)
பெண்கள் குறித்து சர்ச்சைக்குரிய விதத்தில் பேசியதற்கு விளக்கம் அளிக்கும்படி, நடிகர் பாக்யராஜுக்கு, மாநில மகளிர் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. 
 
நடிகரும், இயக்குனருமான பாக்யராஜ் ’கருத்துக்களை பதிவுசெய்’ என்ற புதிய படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், சமீப நாட்களாக தினசரிகளில் கள்ள காதலனோடு சேர்ந்து கணவனை கொன்ற மனைவி, குழந்தையை கொன்ற தாய் போன்ற செய்திகள் அதிகம் வருகின்றன. இதற்கு காரணம் பெண்கள் தங்கள் சுயக்கட்டுப்பாட்டை இழந்ததுதான். 
 
பொள்ளாச்சி விவகாரத்தில் இவ்வளவு பெண்கள் பாதிக்கப்பட்டதற்கு ஆண்கள் மட்டுமே காரணமல்ல. அதற்கு வாய்ப்பு கொடுத்த பெண்களும்தான் என கூறியுள்ளார். பாக்யராஜ் இவ்வாறு பேசியுள்ளதற்கு சமூக வலைதளங்களில் கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன. 
 
மேலும் ஆண்கள் இரண்டாம் மணம் செய்து கொள்வது பற்றியும் நியாயப்படுத்தும் வகையில் பாக்யராஜ் பேசியுள்ளதற்கு பலர் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். இதனைத்தொடர்ந்து தற்போது பாக்யராஜுன் பேச்சுக்கு கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறது தமிழ்நாடு பெண்கள் இயக்கம். மேலும் அவரை கைது செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தி இருந்தது.  
 
இந்நிலையில், பெண்கள் குறித்து சர்ச்சைக்குரிய விதத்தில் பேசியதற்கு உரிய விளக்கம் அளிக்கும்படி, நடிகர் பாக்யராஜுக்கு, மாநில மகளிர் ஆணையம்  நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
 
வரும் திங்கள்கிழமை காலை 10 மணியளவில், மாநில மகளிர் ஆணைய அலுவலகத்தில் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் அந்த நோட்டீசில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

பெண் போலீஸிடம் போன் நம்பர் கேட்ட சவுக்கு சங்கர்? தாக்கப்பட்டது உண்மையா? – மாறிமாறி குற்றச்சாட்டு!

மன்னிப்பு கேட்டார் பெலிக்ஸ்.. ரெட்பிக்ஸ் வெளியிட்ட அறிக்கை..!

இளைஞர்களின் புதிய சிந்தனைகளை கேட்டு செயல்பட உள்ளேன்! – பிரதமர் மோடி!

மதுரை மாவட்டத்தில் கனமழையால் பாதிக்கப்பட்ட நெல், வாழை பயிர்களை ஆய்வு செய்து உரிய இழப்பீடு வழங்க வேண்டும் - முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார்!

3 நாட்களில் 1 லட்ச ரூபாய் பெறலாம்.. விதிகளை தளர்த்திய EPFO! – பென்சன் பயனாளர்கள் மகிழ்ச்சி!

அடுத்த கட்டுரையில்
Show comments