Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ரஜினி மருத்துவமனையில் இருந்தபோது பேசியது என்ன? ஏசி சண்முகம் தகவல்

ரஜினி மருத்துவமனையில் இருந்தபோது பேசியது என்ன? ஏசி சண்முகம் தகவல்
, செவ்வாய், 29 டிசம்பர் 2020 (20:14 IST)
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் சமீபத்தில் உடல் நல குறைவு காரணமாக ஐதராபாத் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற போது அவரிடம் பேசியது என்ன என்பது குறித்து ஏசி சண்முகம் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்
 
ரஜினிகாந்த் அவர்கள் ரத்த அழுத்தம் காரணமாக ஹைதராபாத் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அனுமதிக்கப்பட்டு இருந்த போதுதான் இரண்டு மூன்று முறை பேசியதாகவும் அப்போது அவர் அரசியல் குறித்த அழுத்தங்களை மனதில் கொள்ள வேண்டாம் என்றும் உங்கள் உடல்நிலை தான் முக்கியம் என்றும் நீங்கள் அரசியலுக்கு வராவிட்டாலும் பரவாயில்லை, உடல்நிலையை நன்கு கவனித்துக் கொள்ளுங்கள் என்றுதான் கூறியதாகவும் ஏசி சண்குகம் தெரிவித்தார் 
 
இருப்பினும் தான் வாக்கு கொடுத்து விட்டேனே என்று அவர்கள் கூறியதாகவும் வாக்கை விட மன அமைதி தான் முக்கியம், உடல்நல தான் முக்கியம் என்று தான் கூறியதாகவும் ஏசி சண்முகம் அவர்கள் அந்த பேட்டியில் குறித்துள்ளார்
 
ஏற்கனவே அண்ணாத்த படத்தின் படப்பிடிப்பின் போதும், தான் அவரிடம் போனில் பேசியதாகவும் அப்போதும் இதே கருத்தைத்தான் அவரிடம் வலியுறுத்தியதாகவும் ஏசி சண்முகம் தெரிவித்துள்ளார்

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

10, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு எப்போது செய்முறை தேர்வு? - அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்