Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பின்வாங்கிய ரஜினி: தமிழருவி மணியன் & அர்ஜூன மூர்த்தியின் நிலை என்ன??

பின்வாங்கிய ரஜினி: தமிழருவி மணியன் & அர்ஜூன மூர்த்தியின் நிலை என்ன??
, செவ்வாய், 29 டிசம்பர் 2020 (13:17 IST)
தமிழருவி மணியனுக்கும் அர்ஜூன மூர்த்திக்கும் ரஜினி நன்றி தெரிவித்துள்ளார். 

 
தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தமிழக அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரமாக இறங்கியுள்ளன. இந்நிலையில் ஜனவரியில் கட்சி தொடங்குவதாக அறிவித்துள்ள நடிகர் ரஜினிகாந்த கட்சி தொடர்பான பணிகளில் தீவிரமாக இறங்கிய நிலையில் தற்போது உடல்நல குறைவால் ஓய்வில் உள்ளார். எனினும் கட்சி பெயர், சின்னம் உள்ளிட்டவை திட்டமிட்டபடி அறிவிக்கப்படும் என கூறப்பட்டது.
 
இந்நிலையில் தற்போது திடீர் அறிவிப்பு வெளியிட்டுள்ள ரஜினிகாந்த், தன்னால் அரசியல் கட்சி தொடங்கி தேர்தலை எதிர்கொள்ள முடியவில்லை என்றும், அதனால் அரசியல் கட்சி தொடங்குவதை கை விடுவதாகவும் தெரிவித்துள்ளார். இதை மிகவும் மன வேதனையுடன் அறிவிப்பதாக கூறியுள்ள அவர் தன்னை நம்பி உள்ளவர்களை படுகுழியில் தள்ள விரும்பவில்லை என்றும், தன்னாலான உதவிகளை மக்களுக்கு அரசியலுக்கு அப்பாற்பட்டு செய்வதாகவும் கூறியுள்ள அவர், அனைவரிடமும் மன்னிப்பு கேட்டுள்ளார்.
 
மேலும், தமிழருவி மணியனுக்கும் அர்ஜூன மூர்த்திக்கும் ரஜினி நன்றி தெரிவித்துள்ளார். 3 ஆண்டுகளாக எவ்வள்வோ விமர்சனங்கள் வந்தாலும் தொடர்ந்து என்னை ஆதரித்து முதலில் உங்கள் உடல் நலத்தை கவனியுங்கள் என கூறிய தமிழருவி மணியன் ஐயா அவர்களுக்கு மனமார்ந்த நன்றி. 
 
நான் கேட்டுக்கொண்டதற்கிணங்க ஒரு பெரிய கட்சியின் பொறுப்பான பதவியில் இருந்து விலகி என்னுடன் வந்து பணியாற்ற சம்மதித்த அர்ஜூன மூர்த்திக்கும் நன்றி என குறிப்பிட்டுள்ளார். ஆனால், இதன் பிறகு அர்ஜூன மூர்த்தியும் தமிழருவி மணியனும் என்ன செய்யப்போகிறார்கள் என்பதை பொருத்திருந்து பார்ப்போம். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஏமாத்திட்டியே தலைவா.. நீங்கதான் முக்கியம்! – கலவையான கருத்துக்களுடன் ட்ரெண்டாகும் ரஜினி ஹேஷ்டேக்!