Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஏசி காத்துல ...கட்டிலில் அமர்ந்து படமெடுத்த பாம்பு : வைரல் வீடியோ

ஏசி காத்துல ...கட்டிலில் அமர்ந்து   படமெடுத்த பாம்பு : வைரல் வீடியோ
, புதன், 19 ஜூன் 2019 (17:12 IST)
கடலூர் சோளாங்குப்பம் பகுதியைச் சேர்ந்த ஒருவரின்  வீட்டுக்குள் புகுந்த பாம்பு ஒன்று. அங்குள்ள ஏசி ஒன்றில் யாருக்கும் தெரியாமலேயே இருந்துள்ளது. அவ்வப்போது அந்த ஏசியில்  சத்தம் வந்ததால் வீட்டுக்காரர் ஏசியில் தான் பிரச்சனை என்று கருதி ஏசி மெக்கானிக்கை வீட்டுக்கு வரவழைத்தார்.
அப்போது ஏசி மெக்கானிக் வீட்டில் உள்ள ஏசியில் மேல் பகுதியைக் கழற்றி விட்டு உள்ளுக்குள் பார்த்துள்ளார் அதில். ஒரு பாம்பு இருந்துள்ளது. அதைப் பார்த்துப் பதறிப்போனவர். அந்தப் பாம்பை வீட்டுக்காரருடன் சேர்ந்து விரட்ட முயன்றார்.
 
அந்த பாம்பு ஏசியில் இருந்த பாம்பு, அப்படியே மெதுவாக சுவற்றில் ஊர்ந்து வந்து கட்டிலில் அமர்ந்தது. பின் அங்கிருந்தோரைப் பார்த்து  அந்தப்பாம்பு படமெடுத்தது. பின்னர் அங்கிருந்து நகர்ந்து சாலைக்குச் சென்றது. இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தெருவில் சென்றோரை முட்டித்தள்ளிய முரட்டு மாடு : பரவலாகும் வீடியோ