Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கால் லிட்டருக்கு 2.50 பைசா உயர்ந்ததா ஆவின் பால்??

Webdunia
சனி, 25 ஏப்ரல் 2020 (18:19 IST)
மதுரையில் ஆவின் பாலகங்களில் பால பொருட்கள் அதிக விலைக்கு விற்கப்படுவதாக தெரிகிறது. 
 
தமிழகத்தில் கொரோனா பாதிப்புக் காரணமாக மே 3 ஆம் தேதி வரை ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கில் முழு ஊரடங்காக அடுத்த சில நாட்கள் இருக்கும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. 
 
முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அத்தியாவசிய பொருளான பால் விநியோகம் குறித்து வெளியான அறிவிப்பில் ஆவின் பால் நிறுவனம் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தனியார் பால் பெருமளவு விற்கப்படாத நிலையில், ஆவின் பால் விற்பனையே மகத்தானதாக உள்ளது. 
 
இப்படிப்பட்ட சூழ்நிலையில், மதுரை ஆவின் பாலகங்களில் ஆவின் தயாரிப்புகளுக்கு கால் லிட்டருக்கு 2 ரூபாய் 50 காசு வீதம் கூடுதலாக விலை நிர்ணயிக்கப்பட்டு வசூலிக்கப்படுவதாக பிரபல் ஆன்லைன் பத்தரிக்கை செய்தி ஒன்று தெரிவிக்கிறது. இதனால் மக்கள் அவதிப்படும் நிலை உருவாகியுள்ளதால், தகுந்த துறையினர் இதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

30 வருடத்திற்கு முன் ஜெயலலிதா செய்த தப்பை இப்போது ஸ்டாலின் செய்கிறார்: பத்திரிகையாளர் மணி

தமிழகத்தில் இன்னும் ஒரு வாரம் மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் தகவல்..!

புதின் பதிலடி கொடுக்க இருக்கிறார்.. உக்ரைன் - ரஷ்யா போர் நிற்க வாய்ப்பு இல்லை: டிரம்ப்

எதிர்க்கட்சிகள் போராடவே கூடாது என ஒடுக்கும் பாசிச அரசு: ஈபிஎஸ் கடும் கண்டனம்..!

மாணவி ஷர்மிஷ்டா பனோலிக்கு ஜாமின் வழங்கிய உயர்நீதிமன்றம்.. அரசுக்கு கடும் கண்டனம்.!

அடுத்த கட்டுரையில்
Show comments