Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆவின் பால் பொருட்களின் விலை அதிரடி உயர்வு…

Arun Prasath
ஞாயிறு, 15 செப்டம்பர் 2019 (16:44 IST)
ஆவின் பால் விலை உயர்ந்ததை அடுத்து தற்போது ஆவின் பால் பொருட்களின் விலை உயர்ந்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

ஆவின் பால் விலை லிட்டருக்கு 6 ரூபாய் உயர்ந்திருந்த நிலையில், தற்போது ஆவின் பால் பொருட்களின் விலையும் அதிகரித்துள்ளது.
அதன் படி 460 ரூபாயாக இருந்த ஒரு லிட்டர் நெய், 35 ரூபாய் விலையேற்றப்பட்டு தற்போது 495 ரூபாயாக அதிகரித்துள்ளது. ஒரு கிலோ பன்னீர், 400 ரூபாயில் இருந்து, 50 ரூபாய் உயர்ந்து, 450 ரூபாயாக விலையேற்றப்பட்டுள்ளது.

மேலும் ஒரு கிலோ பால் பவுடர், 270 ரூபாயிலிருந்து 320 ரூபாயாக (ரூ 50 உயர்வு) உயர்த்தப்பட்டுள்ளது. ஒரு கிலோ பால்கோவா 500 ரூபாயிலிருந்து 20 ரூபாய் உயர்ந்து 520 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. 25 ரூபாயாக இருந்த அரை லிட்டர் தயிர், 27 ரூபாயாக (ரூ 2 உயர்வு) உயர்த்தப்பட்டுள்ளது. அரை கிலோ வெண்ணெய் 230 ரூபாயிலிருந்து 240 (ரூ 10 உயர்வு) ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments