Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னையில் பல இடங்களில் ஆவின் பால் விநியோகம் பாதிப்பு: பொதுமக்கள் தவிப்பு

Webdunia
வெள்ளி, 2 ஜூன் 2023 (08:53 IST)
சென்னை உள்பட ஒரு சில பகுதிகளில் ஆவின் பால் விநியோகம் தாமதம் ஆகியுள்ளதால் பொதுமக்கள் தவித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளன. 
 
தமிழ்நாடு ஆவின் நிறுவனம் தினமும் 40 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்து வந்த நிலையில் தற்போது சராசரியாக 30 லட்சம் லிட்டர் மட்டுமே கொள்முதல் செய்கிறது. மேலும் சோழிங்கநல்லூர் பால்பண்ணை, அம்பத்தூர் பால்பண்ணை, மாதவரம் பால் பண்ணை ஆகிய பகுதிகளில் ஆவின் பால் விநியோகம் செய்வதில் கடந்த இரண்டு நாட்களாக தாமதம் ஏற்பட்டு வருவதாகவும் இதனால் குறித்த நேரத்தில் பால் கிடைக்கவில்லை என பொதுமக்கள் அவதியில் இருப்பதாகவும் கூறப்படுகிறது. 
 
வழக்கமாக அதிகாலை 4 மணிக்கு ஆவின் பால் கிடைத்துவிடும் என்றும் ஆனால் கடந்த மூன்று நாட்களாக காலை 7.30  மணிக்கு தான் பால் பாக்கெட் கிடைக்கிறது என்றும் இதனால் விநியோகம் செய்து முடிக்க காலை 9.30 மணி ஆகிறாது என்றும் பால் முகவர் ஒருவர் அறிவித்துள்ளார். 
 
இது குறித்து ஆவின் அதிகாரி கூறியபோது, ‘பழைய ஒப்பந்த பணியாளர்களின் பணிக்காலம் முடிவடை உள்ள நிலையில் புதிய ஒப்பந்த பணியாளர்கள் நியமிக்கப்பட உள்ளனர் என்றும் இது குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம் என்றும் தெரிவித்தார்.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இனிமேல் தான் கோடை ஆரம்பம்.. சென்னையில் கொளுத்த போகுது வெயில்.. வானிலை எச்சரிக்கை..!

திருப்பதி லட்டு செய்யும் நெய்யில் பாமாயில் கலப்பு.. முக்கிய நபர்களை கைது செய்த சிபிஐ..!

இந்தியாவில் எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங்க்.. தொலைத்தொடர்பு துறை வழங்கிய உரிமம்..!

பூந்தமல்லி – போரூர் மெட்ரோ ரயில் பயணம் தொடங்குவது எப்போது? அதிகாரிகள் தகவல்..!

டிரம்ப் இடம் 11 முறை பிரதமர் மோடி சரணடைந்துவிட்டார்.. ராகுல் காந்தி மீண்டும் குற்றச்சாட்டு..!

அடுத்த கட்டுரையில்
Show comments