சென்னையில் பல இடங்களில் ஆவின் பால் விநியோகம் பாதிப்பு: பொதுமக்கள் தவிப்பு

Webdunia
வெள்ளி, 2 ஜூன் 2023 (08:53 IST)
சென்னை உள்பட ஒரு சில பகுதிகளில் ஆவின் பால் விநியோகம் தாமதம் ஆகியுள்ளதால் பொதுமக்கள் தவித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளன. 
 
தமிழ்நாடு ஆவின் நிறுவனம் தினமும் 40 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்து வந்த நிலையில் தற்போது சராசரியாக 30 லட்சம் லிட்டர் மட்டுமே கொள்முதல் செய்கிறது. மேலும் சோழிங்கநல்லூர் பால்பண்ணை, அம்பத்தூர் பால்பண்ணை, மாதவரம் பால் பண்ணை ஆகிய பகுதிகளில் ஆவின் பால் விநியோகம் செய்வதில் கடந்த இரண்டு நாட்களாக தாமதம் ஏற்பட்டு வருவதாகவும் இதனால் குறித்த நேரத்தில் பால் கிடைக்கவில்லை என பொதுமக்கள் அவதியில் இருப்பதாகவும் கூறப்படுகிறது. 
 
வழக்கமாக அதிகாலை 4 மணிக்கு ஆவின் பால் கிடைத்துவிடும் என்றும் ஆனால் கடந்த மூன்று நாட்களாக காலை 7.30  மணிக்கு தான் பால் பாக்கெட் கிடைக்கிறது என்றும் இதனால் விநியோகம் செய்து முடிக்க காலை 9.30 மணி ஆகிறாது என்றும் பால் முகவர் ஒருவர் அறிவித்துள்ளார். 
 
இது குறித்து ஆவின் அதிகாரி கூறியபோது, ‘பழைய ஒப்பந்த பணியாளர்களின் பணிக்காலம் முடிவடை உள்ள நிலையில் புதிய ஒப்பந்த பணியாளர்கள் நியமிக்கப்பட உள்ளனர் என்றும் இது குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம் என்றும் தெரிவித்தார்.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் தாமாகவே பதவி விலக வேண்டும்.. திருமாவளவன் வலியுறுத்தல்:

ஒரே மேடையில் 2 பெண்களுக்கு தாலி கட்டிய இளைஞர்: இருவருடனும் 10 வருடங்கள் வாழ்ந்து குழந்தை பெற்ற பின் திருமணம்..!

நிர்மலா சீதாராமன் 'டீப்ஃபேக்' வீடியோ: பெங்களூரு மூதாட்டியிடம் ரூ.33 லட்சம் மோசடி!

யூடியூப் வீடியோ பார்த்து அறுவை சிகிச்சை: உ.பி.யில் பெண் பலி.. போலி மருத்துவர் மீது வழக்கு

பாலியல் வன்கொடுமைக்கு பின் அந்தரங்க உறுப்பில் இரும்புக்கம்பி.. 7 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments