Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

காங்கிரஸ் கட்சிக்கு சொற்ப தொகுதிகளை ஒதுக்கும் ஆம் ஆத்மி.. பஞ்சாப், டெல்லியில் சிக்கல்..!

aam aadmi party

Mahendran

, செவ்வாய், 9 ஜனவரி 2024 (12:00 IST)
ஆம் ஆத்மி கட்சி பஞ்சாப் மற்றும் டெல்லி ஆகிய இரண்டு மாநிலங்களில் காங்கிரஸ் கட்சிக்கு வரும் நாடாளுமன்ற தேர்தலில் சொற்ப தொகுதிகளை மட்டுமே ஒதுக்க முடிவு செய்திருப்பதாக கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
டெல்லி மற்றும் பஞ்சாப் மாநிலங்களில் ஆளும் ஆம் ஆத்மி கட்சியை காங்கிரஸ் கட்சிக்கு டெல்லியில் மூன்று தொகுதிகளையும் பஞ்சாப் மாநிலத்தில் ஆறு தொகுதிகளையும் தருவதாக கூறியுள்ளது. 
 
ஆனால் காங்கிரஸ் கட்சி இரண்டு மாநிலங்களிலும் சேர்த்து 15 தொகுதிகளை கேட்கிறது. ஆனால் அதே நேரத்தில் குஜராத், ஹரியானா மற்றும் கோவாவில் காங்கிரஸ் கட்சியிடம் இருந்து அதிக தொகுதிகளை ஆம் ஆத்மி எதிர்பார்க்கிறது.  
 
குறிப்பாக ஹரியானாவில் மொத்தமே 10 தொகுதிகள் இருக்கும் நிலையில் அதில் மூன்று தொகுதிகள் வேண்டும் என ஆம் ஆத்மி கேட்பது காங்கிரஸ் கட்சிக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
 
ஏற்கனவே திமுக தமிழகத்தில் காங்கிரஸ் கட்சிக்கு ஐந்து தொகுதிகள் மட்டுமே தருவதாக கூறியிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. மேற்குவங்க மாநிலத்திலும் காங்கிரஸ் கட்சிக்கு சொற்ப தொகுதிகள் மட்டுமே ஒதுக்கப்படுவதால் இந்தியா கூட்டணியில் காங்கிரஸ் நீடிக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
 
Edited by Mahendran

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

21 மாவட்டங்களில் பிற்பகல் 1 மணி வரை மழைக்கு வாய்ப்பு.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!