Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பல்கலைக்கழக வளாகத்தில் கல்லூரி மாணவியின் கழுத்தை அறுத்த வாலிபர்

Webdunia
திங்கள், 30 ஏப்ரல் 2018 (13:36 IST)
சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக வளாகத்தில் இளைஞர் ஒருவர் மாணவியின் கழுத்தை அறுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சிதம்பரம் அண்ணாமலை பல்கலைகழகத்தில் பல்லாயிரக்கணக்கான மாணவ-மாணவிகள் படித்து வருகிறார்கள். பல்கலைக்கழக விடுதியில் வெளியூர் மாணவிகள் படித்து வருகின்றனர்.
 
இக்கல்லூரியில் வேலூர் மாவட்டம் நாட்றாம்பள்ளியை சேர்ந்த மாணவி லாவண்யா முதுகலை விவசாயம் படித்து வந்தார். இன்று காலை மாணவி விடுதியில் இருந்து கல்லூரிக்கு சென்றுள்ளார். அப்போது கல்லூரி வளாகத்தில் இருந்த வாலிபர் ஒருவர், திடீரென்று லாவண்யாவின் கழுத்தை கத்தியால் அறுத்தார். அந்த வாலிபரை அடித்து உதைத்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். மேலும் காயமடைந்த மாணவியை மீட்டு சிதம்பரம் மருத்துவகல்லூரியில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்
விசாரணையில் அந்த வாலிபர், வேலூர் மாவட்டம் நாட்றாம்பள்ளியை சேர்ந்த நவீன் என்பது தெரியவந்தது. எதற்காக அந்த வாலிபர் லாவண்யா மீது கொலைவெறித் தாக்குதல் நடத்தினார் என்பது குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரே நாடு ஒரே கணவர் திட்டமா? பஞ்சாப் முதல்வர் ஆவேசம்..!

மதுரை சுங்கச்சாவடியில் கட்டணம் வசூலிக்க தடை: உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு.

உலக நாடுகளின் ஆதரவை பெற்றுள்ளோம்: சென்னை திரும்பிய கனிமொழி பேட்டி..!

நீட் மறு தேர்வு நடத்த முடியாது.. மத்திய அரசு வாதம்.. ஜூன் 6ஆம் தேதி தீர்ப்பு..!

யார் அந்த சார்? 8 கேள்விகள் கேட்ட நயினார் நாகேந்திரன்.. பதிலுக்காக காத்திருப்போம்!

அடுத்த கட்டுரையில்
Show comments