Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விரக்தியில் பெண் போலீஸ் அதிகாரி தூக்கிட்டுத் தற்கொலை

Webdunia
திங்கள், 10 செப்டம்பர் 2018 (15:43 IST)
சேலத்தில் பெண் போலீஸ் அதிகாரி ஒருவர் விரக்தியில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் போடிநாயக்கன்பட்டியைச் சேர்ந்த புவனேஸ்வரி என்பவர், காவலராகப் பணிபுரிந்து வந்தார். இவருக்கும் கவுதமன் என்பவருக்கும் கடந்த 2014 -ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது.
 
திருமணமான இரண்டு மாதத்தில் அவர்களுக்குள் ஏற்பட்ட பிரச்சனையின் காரணமாக புவனேஸ்வரி கணவரைப் பிரிந்து தன் பெற்றோர் வீட்டில் வசித்து வந்தார். 
 
இந்நிலையில் கவுதமன் 2வது திருமணம் செய்யவிருப்பதாக புவனேஸ்வரிக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து இதுகுறித்து கேட்க புவனேஸ்வரி கவுதமன் வீட்டிற்கு சென்றுள்ளார். ஆனால் கவுதமனின் தாயார் புவனேஸ்வரியை திட்டி அனுப்பியுள்ளார்.
 
இதனால் மனமுடைந்த புவனேஸ்வரி இன்று தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் புவனேஸ்வரியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
 
புவனேஸ்வரியின் தற்கொலைக்கு காரணமாக கவுதமன் மீதும் அவர் குடும்பத்தார் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என புவனேஸ்வரியின் பெற்றோர் கேட்டுக்கொண்டுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாகிஸ்தானை இன்னும் அதிகமாக தாக்கியிருக்க வேண்டும்: சுப்பிரமணியன் சுவாமி

பாகிஸ்தான், வங்கதேசத்தை அடுத்து சீனாவுக்கு ஆப்பு வைத்த மோடி.. இறக்குமதிக்கு திடீர் கட்டுப்பாடு..!

எம்ஜிஆர் ரூட்டை பிடிக்கும் விஜய்! அந்த தொகுதியில் இறங்குகிறாரா? - தொண்டர்கள் எதிர்பார்ப்பு!

மாறி மாறி தடை செய்யும் இந்திய வங்கதேச அரசுகள்.. பாகிஸ்தானை விட மோசமாகி வரும் நிலைமை..!

இந்தியாவை பகைத்து கொண்டதால் துருக்கி அதிபர் மகளுக்கு ரூ.2500 கோடி நஷ்டமா?

அடுத்த கட்டுரையில்
Show comments