Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மதுவிற்கு அடிமையான கணவனை போட்டுத்தள்ளிய மனைவி

Webdunia
திங்கள், 11 ஜூன் 2018 (14:48 IST)
காஞ்சிபுரம் அருகே மதுவிற்கு அடிமையான கணவனை அவரது, மனைவியே கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம் ஓரிக்கை பகுதியை சேர்ந்தவர் திருமுருகன். இவரது மனைவி சுந்தரி. இவர்களுக்கு இரண்டு பிள்ளைகள் உள்ளது. மதுவிற்கு அடிமையான திருமுருகன், வேலைக்கு செல்லாமல் குடித்துவிட்டு மனைவியிடம் சண்டை போட்டு வந்துள்ளார்.
 
இந்நிலையில் நேற்றும் திருமுருகன் குடித்துவிட்டு மனைவியிடம் தகராறு செய்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த திருமுருகனின் மனைவி சுந்தரி, அம்மிக்கல்லை எடுத்து கணவரின் தலையில் போட்டுள்ளார். இதில் படுகாயமடைந்த திருமுருகன் சம்பவ இடத்தி்லே பலியானார்.
 
விஷயமறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீஸார், படுகொலை செய்யப்பட்ட திருமுருகனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சுந்தரியை கைது செய்துள்ள போலீஸார் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். பெற்றோர் செய்த தவறிற்கு, அவர்களது குழந்தைகள் அனாதையாய் நிற்கின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

அடுத்த கட்டுரையில்
Show comments