Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பேனா நினைவுச்சின்னத்திற்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் 3வது வழக்கு..!

Webdunia
செவ்வாய், 23 மே 2023 (16:12 IST)
முன்னாள் முதல்வர் கருணாநிதி நினைவாக பேனா நினைவுச் சின்னம் வைக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ள நிலையில் இந்த நினைவுச் சின்னத்துக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் ஏற்கனவே இரண்டு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்ட நிலையில் தற்போது மூன்றாவது வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.
 
கருணாநிதி நினைவிடம் அமைந்துள்ள பகுதியில் பின் பக்கமாக கடல் மேல் பேனா நினைவுச் சின்னத்தை கட்டி முடிக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. இந்த நினைவுச் சின்னத்திற்கு 15 நிபந்தனைகளுடன் மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ள நிலையில் தமிழக அரசு அடுத்த கட்ட நடவடிக்கையை எடுக்க முயற்சி செய்து வருகிறது. 
 
இந்த நிலையில் பேனா நினைவு சின்னத்துக்கு எதிராக ஏற்கனவே மீனவர் சங்கம் சார்பிலும் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் சார்பிலும் தனிதனி மனுக்கள் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 
 
இந்த நிலையில் மதுரையை சேர்ந்த கேகே ரமேஷ் என்பவர் சுப்ரீம் கோர்ட்டில் பேனா நினைவுச் சின்னம் அமைக்க தடை விதிக்க வேண்டும் என்று மனு தாக்கல் செய்து உள்ளார். கடல் வளத்தை பாதுகாக்கவும் கடல் அரிப்பை தடுக்கும் வகையிலும் இந்த நினைவு சின்னத்திற்கு அனுமதி வழங்க கூடாது என்று அவர் தெரிவித்துள்ளார்.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments