Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எல்லா பட்டப்படிப்புக்கும் நுழைவு தேர்வு நடத்த முடியாது! – மத்திய அரசுக்கு கடிதம்!

Webdunia
வியாழன், 22 அக்டோபர் 2020 (12:39 IST)
புதிய தேசிய கல்விக் கொள்கையை நாடு முழுவதும் அமல்படுத்த மத்திய அரசு நடவடிக்கைகள் மேற்கொண்டு வரும் நிலையில் பட்டப்படிப்புகளுக்கு நுழைவு தேர்வு நடத்துவதற்கு எதிராக தமிழக அரசு கடிதம் எழுதியுள்ளது.

மத்திய அரசு நாடு முழுவதும் அமல்படுத்த உள்ள தேசிய கல்விக் கொள்கை பல்வேறு எதிர்ப்புகளுக்கு உள்ளாகி வருகிறது. முன்னதாக தேசிய கல்வி கொள்கையில் உள்ள மும்மொழி திட்டத்தை தமிழகத்தில் அனுமதிக்க முடியாது என தமிழக அரசு தெரிவித்திருந்தது.

இந்நிலையில் 12வது முடித்த அனைவருக்குமே பட்டப்படிப்புகளுக்காக தேசிய அளவில் நுழைவு தேர்வு நடைபெறும் என்று தேசிய கல்வி கொள்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது சரியான பரிந்துரை அல்ல என்று தெரிவித்துள்ள தமிழக அரசு இந்த அம்சத்தை கல்வி கொள்கையிலிருந்து நீக்க வேண்டும் என கடிதம் எழுதியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

துணை குடியரசுத் தலைவர் பதவியை ராஜினாமா செய்த ஜகதீப் தன்கருக்கு ஓய்வூதியப் பலன்கள் கிடைக்குமா?

தேசிய நெடுஞ்சாலையில் விழுந்து நொறுங்கிய விமானம்.. விமானத்தில் பயணம் செய்தவர்கள் பலி..!

பங்குச்சந்தை இன்று மீண்டும் சரிவு.. இன்றைய சென்செக்ஸ், நிப்டி நிலவரம்..!

அதை இப்போது சொல்ல முடியாது.. ராஜ்ய சபா எம்பி பதவியேற்க இருக்கும் கமல் பேட்டி..!

9.42 லட்சம் சிம் கார்டுகள் முடக்கம்: மத்திய உள்துறை அமைச்சகம் அதிரடி நடவடிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments