Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாளையங்கோட்டை சிறைச்சாலையில் கருணாநிதிக்கு நினைவு சின்னம்: அமைச்சர் ரகுபதி

Webdunia
வியாழன், 4 ஆகஸ்ட் 2022 (15:35 IST)
சென்னை மெரினாவில் முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு பேனா சிலை வைக்க வேண்டும் என தமிழக அரசு திட்டமிட்டு இருக்கும் நிலையில் தற்போது பாளையங்கோட்டை சிறைச்சாலையில் கருணாநிதிக்கு நினைவுச்சின்னம் அமைக்க திட்டமிடப்பட்டு இருப்பதாக அமைச்சர் ரகுபதி அவர்கள் தெரிவித்துள்ளார்
 
முன்னாள் திமுக தலைவரும் முன்னாள் முதல்வருமான கருணாநிதியின் நினைவாக சென்னை மெரினாவில் வங்கக்கடலில் 134 அடிக்கு அவரது பேனா சிலை வைக்க தமிழக அரசு முயற்சித்து வருகிறது 
 
இதற்கு பாஜக உள்ளிட்ட ஒரு சில கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இந்த நிலையில் பாளையங்கோட்டை சிறையில் கருணாநிதி அடைக்கப்பட்டிருந்ததை குறிப்பிடும் வகையில் பாளையங்கோட்டை சிறையில் ஒரு நினைவுச்சின்னம் அமைக்க இருப்பதாக அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார் 
 
இன்று அவர் சிறையில் ஆய்வு மேற்கொண்ட பின்னர் செய்தியாளர்களை சந்தித்த போது இந்த தகவலை தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

நடுவானில் இயந்திரக்கோளாறு..! அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்..!!

இன்று மாலை 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

அரசியலமைப்பை யாராலும் மாற்ற முடியாது..! காங்கிரஸுக்கு அமைச்சர் நிதின் கட்கரி பதிலடி..!!

வங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.! தமிழகத்தில் 3 நாட்களுக்கு ரெட் அலர்ட்..!!

100 நாள் திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் உயர்வு..! அரசாணை வெளியிட்ட தமிழக அரசு...!!

அடுத்த கட்டுரையில்
Show comments