Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட சிறுவனை காப்பாற்றிய ராணுவ வீரர்

Webdunia
வெள்ளி, 30 ஜூன் 2023 (16:00 IST)
நீலகிரி மாவட்டம் பந்தலூரில் ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் அடித்துச் செல்லப்பட்ட சிறுவனை ராணுவ வீரர் ஒருவர் காப்பாற்றினார்.

நீலகிரி மாவட்டம் பந்தலூரில் தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் அத்திகுன்னா ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில்,  அத்திகுன்னா பகுதியில் உள்ள தனியார் தேயிலை தோட்டத்தில் வேலை செய்து வரும் அசாம் மாநிலத்தைச் சேர்ந்த முகமது சாபிக்கின் மகன் சாபிக் (7 வயது) , அந்த ஆற்றில் குளிக்கச் சென்றிருந்தார்.  அப்போது, சிறுவன் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டார்.  பொதுமக்கள் அவரைக் காப்பாற்ற முயற்சி செய்தும் முடியவில்லை.

இந்த நிலையில், மத்திய துணை ராணுவ படை வீரர் ஜேம்ஸ் ஆற்றில் குதித்து நீண்ட துரம் வெள்ளத்தில் நீந்தி, சிறுவன் சாபிக்கை பத்திரமாக மீட்டு காப்பாற்றினார்.

ராணுவ படை வீரர் ஜேம்ஸுக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சிவகாசி விஸ்வநாத சுவாமி கோவில் வைகாசி தேரோட்டம் திடீர் நிறுத்தம்: என்ன காரணம்?

எந்த கூத்தாடி பயளுகளுடைய வாசலிலும் போய் நிற்காதீங்க.. வேல்முருகன் சர்ச்சை பேச்சு..!

அரசு பேருந்துகளில் தமிழ்நாடு பெயர் நீக்கப்பட்டதா? அமைச்சர் சிவசங்கர் விளக்கம்..!

உன் அம்மாவையும் தாத்தாவையும் கொன்றது தீவிரவாதிகள்.. பிலாவல் பூட்டோவுக்கு ஒவைசி பதிலடி..!

ராகுல் முனீர் மற்றும் ராகுல் ஷெரீப் போன்ற பெயர்கள் ராகுலுக்கு பொருத்தமாக இருக்கும்: பாஜக..!

அடுத்த கட்டுரையில்
Show comments