Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட சிறுவனை காப்பாற்றிய ராணுவ வீரர்

Webdunia
வெள்ளி, 30 ஜூன் 2023 (16:00 IST)
நீலகிரி மாவட்டம் பந்தலூரில் ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் அடித்துச் செல்லப்பட்ட சிறுவனை ராணுவ வீரர் ஒருவர் காப்பாற்றினார்.

நீலகிரி மாவட்டம் பந்தலூரில் தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் அத்திகுன்னா ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில்,  அத்திகுன்னா பகுதியில் உள்ள தனியார் தேயிலை தோட்டத்தில் வேலை செய்து வரும் அசாம் மாநிலத்தைச் சேர்ந்த முகமது சாபிக்கின் மகன் சாபிக் (7 வயது) , அந்த ஆற்றில் குளிக்கச் சென்றிருந்தார்.  அப்போது, சிறுவன் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டார்.  பொதுமக்கள் அவரைக் காப்பாற்ற முயற்சி செய்தும் முடியவில்லை.

இந்த நிலையில், மத்திய துணை ராணுவ படை வீரர் ஜேம்ஸ் ஆற்றில் குதித்து நீண்ட துரம் வெள்ளத்தில் நீந்தி, சிறுவன் சாபிக்கை பத்திரமாக மீட்டு காப்பாற்றினார்.

ராணுவ படை வீரர் ஜேம்ஸுக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருமணத்திற்கு என்னை ஏன் அழைக்கவில்லை.. துப்பாக்கியால் சுட்ட பக்கத்து வீட்டுக்காரர்..!

மறுமணம் செய்த பெண் ஊழியருக்கு மகப்பேறு விடுப்பு கிடையாதா? ஐகோர்ட் கண்டனம்..!

தமிழகத்தில் இன்றும் நாளையும் கனமழை.. அதேசமயம் வெயிலும் கொளுத்தும்: வானிலை அறிவிப்பு..!

தெலுங்கானாவில் இருந்து குமரிக்கு திருவண்ணாமலை வழியாக சிறப்பு ரயில்: தெற்கு ரயில்வே அறிவிப்பு..!

வட இந்தியர்கள் பன்னிக்குட்டி போல் குழந்தைகள் பெற்றுள்ளனர்.. அமைச்சர் கருத்துக்கு அண்ணாமலை கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments