Publish Date: Wed, 24 Apr 2019 (20:51 IST)
Updated Date: Wed, 24 Apr 2019 (20:54 IST)
கோவை மாவட்டம் தேனீர் பந்தல் சாலையில் உள்ளது ஐடிபிஐ வங்கி. இவ்வங்கியில் ஒரு ஏடிஎம் மிசின் உள்ளது. ஆனால் மக்கள் இந்த மெஷினில் பணம் எடுக்கம் பயந்தனர். காரணம் பாம்பு ஒன்று இந்த மெஷினில் இருந்ததால் யாரும் நெருங்க்கூட இல்லை.
இதனையடுத்து பாம்பை பிடிக்கிற நிபுணரை வரவழைத்த வங்கியினர் பாம்பை படிக்க வைக்க முயற்சி மேற்க்கொண்டனர்.
பாம்பு பிடிப்பவர் சம்பவ இடத்திற்கு வந்ததும் ஏடிஎம் மெஷினில் உள்ள எலெக்ட்சிக் ஒயர்களில் ஒய்யாரமாக இருந்துள்ளது. அதைப் அலேக்காய் பிடித்த பாம்பு பிடிப்பவர் அந்த பாம்பை உயிரிடன் பிடித்து அவ்விடத்திலிருந்து அகற்றினார்.
இதை வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.