கிருஷ்ணகிரியிலும் உருண்டு வந்த பாறை.. அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய மக்கள்!

Prasanth Karthick
புதன், 4 டிசம்பர் 2024 (12:13 IST)

திருவண்ணாமலையில் கனமழையால் நிலச்சரிவு ஏற்பட்டது போல கிருஷ்ணகிரியிலும் நடந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

 

ஃபெஞ்சல் புயல் காரணமாக பெய்த கனமழையால் திருவண்ணாமலை மகாதீப மலையில் நிலச்சரிவு ஏற்பட்ட நிலையில் பாறைகள் உருண்டு விழுந்ததில் மலையடிவார பகுதியில் வசித்த 7 பேர் பலியானார்கள்.

 

இந்நிலையில் அப்படியானதொரு சம்பவம் கிருஷ்ணகிரியிலும் நடந்துள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நேற்று சாரல் மழை பெய்து வந்த நிலையில் அங்குள்ள பழைய பேட்டையில் உள்ள மலையில் இருந்து காலை ராட்சத பாறை ஒன்று திடீரென சரிந்து விழுந்துள்ளது.

 

அடிவாரத்தில் உள்ள மேல்தெருவிற்கு உருண்டு வந்த பாறை அங்கு வெங்கடாச்சலம் என்பவர் வீட்டின் சுற்றுசுவர் மீது மோதியது. இதில் அவரது வீட்டு சுவர் இடிந்து விழுந்த நிலையில், அங்கிருந்தவர்களும், தெரு மக்களும் அலறியடித்து வெளியேறியுள்ளனர். அந்த வீட்டின் அருகே மற்றொரு சிறு பாறையும் இருந்ததால் அதில் மோதி ராட்சத பாறை நின்றதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது. 

 

இல்லாவிட்டால் பாறை முழு வேகத்தில் உருண்டு வந்து 20க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வாழும் அப்பகுதியில் நாசத்தை ஏற்படுத்தியிருக்கும் என கூறப்படுகிறது. சம்பவ இடம் விரைந்துள்ள மாவட்ட நிர்வாக அதிகாரிகள் பாறையை எவ்வாறு அகற்றுவது என்பது குறித்து ஆலோசனை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

 

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

22 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு.. வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு..!

கனமழை காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு.. எந்தெந்த மாவட்டங்கள்?

புழல், செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து தண்ணீர் திறப்பு.. பொதுமக்களுக்கு எச்சரிக்கை..!

திடீரென டெல்லி சென்ற ஓபிஎஸ்.. பாஜக தலைவர்கள் சந்திப்பா? தேர்தல் ஆணையத்திற்கு செல்கிறாரா?

இம்ரான் கானை அரசியல் கைதியாக ஏற்கிறதா இந்தியா? பாகிஸ்தான் ஊடகம் பரப்பிய தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments