Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கிருஷ்ணகிரியிலும் உருண்டு வந்த பாறை.. அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய மக்கள்!

Prasanth Karthick
புதன், 4 டிசம்பர் 2024 (12:13 IST)

திருவண்ணாமலையில் கனமழையால் நிலச்சரிவு ஏற்பட்டது போல கிருஷ்ணகிரியிலும் நடந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

 

ஃபெஞ்சல் புயல் காரணமாக பெய்த கனமழையால் திருவண்ணாமலை மகாதீப மலையில் நிலச்சரிவு ஏற்பட்ட நிலையில் பாறைகள் உருண்டு விழுந்ததில் மலையடிவார பகுதியில் வசித்த 7 பேர் பலியானார்கள்.

 

இந்நிலையில் அப்படியானதொரு சம்பவம் கிருஷ்ணகிரியிலும் நடந்துள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நேற்று சாரல் மழை பெய்து வந்த நிலையில் அங்குள்ள பழைய பேட்டையில் உள்ள மலையில் இருந்து காலை ராட்சத பாறை ஒன்று திடீரென சரிந்து விழுந்துள்ளது.

 

அடிவாரத்தில் உள்ள மேல்தெருவிற்கு உருண்டு வந்த பாறை அங்கு வெங்கடாச்சலம் என்பவர் வீட்டின் சுற்றுசுவர் மீது மோதியது. இதில் அவரது வீட்டு சுவர் இடிந்து விழுந்த நிலையில், அங்கிருந்தவர்களும், தெரு மக்களும் அலறியடித்து வெளியேறியுள்ளனர். அந்த வீட்டின் அருகே மற்றொரு சிறு பாறையும் இருந்ததால் அதில் மோதி ராட்சத பாறை நின்றதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது. 

 

இல்லாவிட்டால் பாறை முழு வேகத்தில் உருண்டு வந்து 20க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வாழும் அப்பகுதியில் நாசத்தை ஏற்படுத்தியிருக்கும் என கூறப்படுகிறது. சம்பவ இடம் விரைந்துள்ள மாவட்ட நிர்வாக அதிகாரிகள் பாறையை எவ்வாறு அகற்றுவது என்பது குறித்து ஆலோசனை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

 

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

1 மணி நேரத்தில் 8 இடங்களில் நகைப்பறிப்பு! விமான நிலையத்தில் கொள்ளையர்களை பிடித்த போலீஸ்!

இந்தியாவும் சீனாவும் தேர்தலில் தலையிடலாம்: கனடா உளவுத்துறை எச்சரிக்கை..!

சிவசேனாவின் உண்மை முகத்தை பாக்கப்போற நீ..! - குணால் கம்ராவுக்கு அமைச்சர் எச்சரிக்கை!

டாஸ்மாக் முறைகேடு வழக்கு; ஐகோர்ட் நீதிபதிகள் திடீர் விலகல்! பரபரப்பு தகவல்..!

Exam போகணும்.. ப்ளீஸ் நிறுத்துங்க! பேருந்துக்கு பின்னாலேயே ஓடிய மாணவி! - நிறுத்தாமல் சென்ற ஓட்டுநர் சஸ்பெண்ட்!

அடுத்த கட்டுரையில்
Show comments