Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னை கலெக்டர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம்: தமிழிசை அதிரடி முடிவு

Webdunia
செவ்வாய், 16 அக்டோபர் 2018 (07:18 IST)
பொதுவாக எதிர்க்கட்சிகள் தான் அரசை எதிர்த்து ஆர்ப்பாட்டம் செய்வது வழக்கம். ஆனால் கடந்த சில நாட்களாக ஆளும் கட்சியே ஆர்ப்பாட்டம் செய்ய தொடங்கிவிட்டன.

சமீபத்தில் இந்தியா வந்திருந்த ராஜபக்சே கூறிய கருத்துக்காக காங்கிரஸ் மற்றும் திமுகவுக்கு கண்டனம் தெரிவித்து தமிழகத்தின் பல பகுதிகளில் ஆளும் அதிமுக கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தியது என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் நாளை சென்னை கலெக்டர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் செய்யவிருப்பதாக மத்தியில் ஆட்சி செய்யும் பாஜகவின் தமிழக தலைவர் அறிவித்துள்ளார். இதுகுறித்து தமிழிசை தனது டுவிட்டரில் கூறியதாவது: தமிழ்மொழியையும் தமிழர் பண்பாட்டையும் உணர்வையும், உணவையும் பாகிஸ்தானுடன் ஒப்பிட்டு குறைத்து பேசி தென்னாட்டை இகழ்ந்து தமிழ்நாட்டை அவமதித்த காங்கிரஸ் அமைச்சர் சித்துவை கண்டித்து நாளை காலை 10:00 மணிக்கு சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக தமிழக பாஜக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்' என்று கூறியுள்ளார்.

பஞ்சாபை சேர்ந்த ஒரு அமைச்சரின் கருத்துக்கு தமிழகத்தில் ஆர்ப்பாட்டம் செய்வதற்கு பதிலாக பஞ்சாபுக்கே சென்று ஆர்ப்பாட்டம் செய்யலாமே என நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சொந்த மகளை கொலை செய்தவர்.. சாட்ஜிபிடி கொடுத்த பொய்யான தகவலால் அதிர்ச்சி..!

உக்ரைன் - ரஷ்யா போலவே காசா மீதும் இஸ்ரேல் தொடர் தாக்குதல்.. பெரும் அதிர்ச்சி..!

ஊடகங்களாவது கேள்வி எழுப்பியிருக்கலாம்: தொகுதி மறுசீரமைப்பு கூட்டம் குறித்து ஆர்.எஸ்.எஸ்..!

கேள்விக்குறியான அமைதி பேச்சுவார்த்தை.. உக்ரைன் மீது ரஷ்யா சரமாரியான தாக்குதல்..!

மார்ச் 24, 25ஆம் தேதிகளில் வங்கி ஊழியர்களின் வேலை நிறுத்தத்தில் திடீர் திருப்பம்.. என்ன நடந்தது?

அடுத்த கட்டுரையில்
Show comments