Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மார்க் கம்மியாயிடுச்சு: கொடூரமான முறையில் தற்கொலை செய்துகொண்ட பிளஸ்2 மாணவி

மார்க் கம்மியாயிடுச்சு: கொடூரமான முறையில் தற்கொலை செய்துகொண்ட பிளஸ்2 மாணவி
, சனி, 20 ஏப்ரல் 2019 (10:08 IST)
பிளஸ்2 மாணவி தேர்வில் மதிப்பெண் குறைந்ததால் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
தமிழகம் முழுவதும் உள்ள பிளஸ்2 மாணவர்களுக்கு மார்ச் 1 ஆம் தேதி பொதுத் தேர்வுகள் நடந்தன. மொத்தமாக 8 ,87,992 பேர் தேர்வு எழுதினர். இதையடுத்து நேற்று தேர்வு முடிவுகள் வெளியாகின. தேர்வு முடிவுகளில் மொத்தமாக 91.03 சதவீத மாணவ மாணவிகள் தேர்ச்சியடைந்துள்ளனர். 
 
இந்நிலையில் கடலூரை சேர்ந்த காவ்யா(17) என்ற பிளஸ்2 மாணவி தேர்வில் அனைத்து பாடங்களிலும் தேர்ச்சி பெற்றிருந்தார். ஆனாலும் அனைத்து பாடங்களிலுமே கம்மியான மதிப்பெண்களை பெற்றிருந்தார். இதனால் மனமுடைந்த மானவி வீட்டிலிருந்து வெளியேறி ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பொன்பரப்பி தாக்குதலை கண்டித்து அனைத்து மாவட்டங்களிலும் ஆர்ப்பாட்டம் – விசிக அறிவிப்பு !