Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இரும்பிக் கொண்டே இருந்த மூதாட்டியை வெளியே வீசிய மருத்துவமனை ஊழியர்கள்

இரும்பிக் கொண்டே இருந்த மூதாட்டியை வெளியே வீசிய மருத்துவமனை ஊழியர்கள்
, புதன், 3 அக்டோபர் 2018 (08:38 IST)
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மூதாட்டி ஒருவர் இரும்பிக் கொண்டே இருந்ததால், அவரை மருத்துவமனை ஊழியர்கள் தூக்கி வெளியே வீசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆஸ்துமா நோயால் மேரி(67), என்ற மூதாட்டி சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
 
இந்நிலையில் நேற்றிரவு மேரி தொடர்ச்சியாக இரும்பிக் கொண்டே இருந்தார். இதனால் கோபமடைந்த மருத்துவமனை ஊழியர்கள், அவரை தூக்கிச் சென்று அருகில் உள்ள சைக்கிள் ஸ்டேண்டில் வீசிவிட்டு சென்றனர்.
 
அந்த மூதாட்டி இரவு முழுவதும் அழுது கொண்டே இருந்தார். மறுநாள் காலை மேரியை கண்ட பொதுமக்கள் அவரை மருத்துவமனையில் அனுமதித்தனர். அவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அந்த மூதாட்டியை வெளியே வீசிய மருத்துவமனை ஊழியர்கள் யார் என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்த திமுக உரிமை இல்லை: தமிழிசை