Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தனிக்குடித்தனம் வர மறுத்த கணவன் - விரக்தியில் புதுப்பெண் தூக்கிட்டு தற்கொலை

Webdunia
செவ்வாய், 4 செப்டம்பர் 2018 (14:29 IST)
கடலூரில் இளம்பெண் ஒருவர் தனது கணவன் தனிக்குடித்தனம் வர மறுத்ததால், மனவேதனையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் மாவட்டம் புவனகிரியை சேர்ந்தவர் சீனிவாசன். இவரது மகள் மாலதி(32). இவருக்கும் சென்னை மடிப்பாக்கத்தை சேர்ந்த ரவிசங்கர்(35) என்பவருக்கும் கடந்த 5 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.
 
திருமணம் முடிந்த பின்னர் மாலதி தனது கணவர், மாமனார், மாமியாருடன் சென்னையில் வசித்து வந்தார். மாலதி ரவிசங்கரிடம் தனிக்குடித்தனம் செல்ல வேண்டுமென வற்புறுத்தி வந்துள்ளார். இதற்கு ரவிசங்கர் ஒத்துக்கொள்ளவில்லை. இதனால் மாலதி கோபித்துக் கொண்டு தனது தாய் வீட்டிற்கு சென்றுவிட்டார். வீட்டிற்கு சென்ற மாலதி மிகுந்த மனஉளைச்சலில் இருந்தார்.
 
இந்நிலையில் வீட்டில் யாருமில்லா நேரத்தில் மாலதி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த போலீஸார், மாலதியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். திருமணமாக 5 மாதத்தில் புதுப்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

அடுத்த கட்டுரையில்
Show comments