Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாய் குரைச்சுட்டே இருக்கு, தூங்க முடியல: லாலுபிரசாத் குமுறல்

Webdunia
செவ்வாய், 4 செப்டம்பர் 2018 (13:11 IST)
இரவு நேரங்களில் ஓயாமல் தெருநாய்கள் குரைத்து கொண்டிருப்பதால் தன்னால் தூங்க முடியவில்லை என்று ஊழல் புகாரில் சிக்கிய லாலுபிரசாத் கூறி இருக்கிறார்.
முன்னாள் பீகார் முதல்வர் லாலுபிரசாத் யாதவ், மாட்டுத்தீவன ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டு ஜார்கண்ட் சிறையில் தண்டனை அனுபவித்து வருகிறார். சிறையில் அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் அவர் ராஜேந்திரா மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
 
இந்நிலையில் லாலு பிரசாத்தின் ஆதரவு எம்.எல்.ஏ.வான போலா யாதவ், லாலு பிரசாத்தின் அறைக்கு அருகே இரவு நேரங்களில் தொடர்ந்து தெரு நாய்கள் குரைப்பதால் அவரால் ஒழுங்காக தூங்க முடிவதில்லை, அதேபோல் அவரின் அறை கழிவறையும் மிகவும் மோசமாக உள்ளது. ஆகவே அவருக்கு வேறு அறை ஒதுக்க வேண்டும் என மருத்துவமனை நிர்வாகத்தினரிடம் கேட்டுள்ளார்.
 
அவரின் அறை மாற்றம் குறித்து சிறை நிர்வாகம் தான் முடிவெடுக்க வேண்டும் என மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments