Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மகள் இறந்த துக்கத்தில் தாயும் மரணம்

Webdunia
சனி, 16 ஜூன் 2018 (10:06 IST)
மகள் இறந்த துக்கத்தில் அவரது தாயாரும் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டையை சேர்ந்தவர் கண்ணம்மாள். இவரது மகள் கோவிந்தம்மாள். கோவிந்தம்மாளுக்கு திருமணமாகி தனது கணவன் பூபதியோடு சேர்ந்து பீடி நிறுவனம் நடத்தி வந்தார்.
 
இந்நிலையில் கோவிந்தம்மாள் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கோவில் திருவிழாவுக்கு சென்ற போது ஏற்பட்ட விபத்தில், கோமா நிலைக்கு சென்றார். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கோவிந்தம்மாளை அவரது குடும்பத்தினர் வீட்டிற்கு அழைத்து வந்தனர். வீட்டிற்கு வந்த கோவிந்தம்மாள் நேற்று முன்தினம் இறந்து விட்டார்.
 
கோவிந்தம்மாள் இறந்த தகவலை கேள்விப்பட்டதும் கண்ணம்மாள் அதிர்ச்சியடைந்தார். அந்த அதிர்ச்சியிலேயே அவரும் இறந்து விட்டார். அவர்கள் இரண்டு பேரின் உடலையும் ஒரே நேரத்தில் அடக்கம் செய்தனர். இதனால் அப்பகுதி மக்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments