Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அதிமுக மாவட்ட செயலாளர்களுடன் ஓபிஎஸ் - ஈபிஎஸ் இன்று அவசர ஆலோசனை

Webdunia
வெள்ளி, 5 மார்ச் 2021 (08:33 IST)
அதிமுக மாவட்டச் செயலாளளுடன் இன்று ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் மற்றும் துணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் அவசர ஆலோசனை செய்ய உள்ளதாக தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன 
 
தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி தேர்தல் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தேர்தலுக்கான பணிகள் கடந்த சில நாட்களாக அதிமுக தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. இந்த நிலையில் அதிமுக மாவட்ட செயலாளர்களுடன் ஓபிஎஸ் ஈபிஎஸ் ஆகிய இருவரும் என்று ஆலோசனை செய்ய உள்ளனர்
 
சட்டசபை தேர்தலில் போட்டியிட விருப்ப மனு பெற்றவர்களிடம் நேற்று நேர்காணல் நடைபெற்ற நிலையில் மாவட்ட செயலாளர்களுடன் ஆலோசனை நடத்தி வேட்பாளர்களை இறுதி செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன
 
இதனையடுத்து இன்றைய ஆலோசனைக் கூட்டத்தில் அனைத்து மாவட்ட செயலாளர்களும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது. இன்றைய ஆலோசனைக் கூட்டத்திற்கு பின்னர் முதல் கட்ட வேட்பாளர் பட்டியல் அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
 
 

தொடர்புடைய செய்திகள்

இன்று மாலை 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

அரசியலமைப்பை யாராலும் மாற்ற முடியாது..! காங்கிரஸுக்கு அமைச்சர் நிதின் கட்கரி பதிலடி..!!

வங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.! தமிழகத்தில் 3 நாட்களுக்கு ரெட் அலர்ட்..!!

100 நாள் திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் உயர்வு..! அரசாணை வெளியிட்ட தமிழக அரசு...!!

விஜயின் த.வெ.க மாநாட்டில் பங்கேற்பீர்களா.? சீமான் சொன்ன பளீச் பதில்..!!

அடுத்த கட்டுரையில்
Show comments