Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திமுக பேனரால் வந்த வம்பு: கடைசி நேரத்தில் நின்றுபோன திருமணம்

Webdunia
திங்கள், 10 டிசம்பர் 2018 (10:45 IST)
ஆரணியில் பேனர் வைப்பது சம்மந்தமாக நடைபெற்ற தகராறில் கடைசி நேரத்தில் திருமணம் ரத்து செய்யப்பட்டது.
ஆரணியை சேர்ந்த திமுக பிரமுகரான ராஜகோபால என்பவரது மகள் சந்தியாவிற்கும் அதிமுகவை சார்ந்த சண்முகம் என்பவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. கட்சியை தாண்டி இரு வீட்டாரும் நட்புடன் பழகி வந்தார்கள். கல்யாண வேலை தடபுடலாக நடைபெற்றது. 
 
நேற்று காலை திருமணம் நடைபெற இருந்த நேரத்தில், பெண் வீட்டார் வம்படியாய் மண்டபத்திற்கு அருகே திமுக பேனரை வைத்தனர். இதனால் மணமகன் வீட்டார் மணமகள் வீட்டாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
 
கடைசியில் திருமணம் நிறுத்தப்பட்டது. அந்த பெண்ணிற்கு அருகில் இருக்கும் கோவிலில் வேறு ஒருவருடன் திருமணம் நடைபெற்றது. ஒரே ஒரு பேனரால் திருமணம் தடைபட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments