Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மனைவியைக் அரிவாளால் வெட்டிய கணவன் போலீஸுக்கு பயந்து தற்கொலை

Webdunia
திங்கள், 1 அக்டோபர் 2018 (09:07 IST)
குமரியில் மனைவியை அரிவாளால் வெட்டிய கணவன் போலீஸுக்கு பயந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குமரி மாவட்டம் அஞ்சுகிராமம் கனகப்பபுரத்தை சேர்ந்தவர் டால்டன் செல்வ எட்வர்ட்(40). இவர் ஒரு வக்கீல். இவருக்கு ஜெகதீஷ் ஷைனி (33) என்ற மனைவியும் 4 வயதில் ஒரு மகனும், 2½ வயதில் ஒரு மகளும் உள்ளனர். இவரது மனைவி அரசு கல்லூரி பேராசிரியையாக பணிபுரிந்து வருகிறார்.
 
இந்நிலையில் கணவன் மனைவிக்கிடையே அடிக்கடி சண்டை இருந்து வந்துள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்னர் இவர்களுக்குள் சண்டை முற்றிப்போகவே எட்வர்ட் தனது மனைவியை அரிவாளால் வெட்டியுள்ளார். படுகாயமடைந்த அவரது மனைவி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
 
இதற்கிடையே தப்பித்து ஓடிய எட்வர்டை போலீஸார் தீவிரமாக தேடி வந்த நிலையில், எட்வர்ட் போலீஸுக்கு பயந்து கர்நாடக மாநிலம் மண்டியா அருகே ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டார். போலீஸார் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆன்லைனில் ஷாப்பிங் செய்தால் மனநலம் பாதிக்கும்: ஆய்வில் அதிர்ச்சி தகவல்..!

தேர்தல் முறைகேடு: ஆதாரம் இருந்தால் வெளியிடுங்கள்: ராகுல் காந்திக்கு ராஜ்நாத் சிங் சவால்..!

வெளிமாநிலத்தவர் தமிழக வாக்காளர்களாக மாறினால் பாதிப்பு ஏற்படும்: துரைமுருகன்

ஒரு கையில் புற்றுநோய் பாதித்த குழந்தை..இன்னொரு கையில் உணவு.. ஃபுட் டெலிவரி செய்யும் பெண்..!

கூலிப்படையை வைத்து கணவரை கொலை செய்ய முயன்ற மனைவி.. உபியில் ஒரு அதிர்ச்சி சம்பவம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments