Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பலாத்காரம் செய்யப்பட்டாரா இளம்பெண்? புதுக்கோட்டையில் கோரம்

பலாத்காரம் செய்யப்பட்டாரா இளம்பெண்? புதுக்கோட்டையில் கோரம்
, வியாழன், 20 டிசம்பர் 2018 (16:05 IST)
புதுக்கோட்டையில் மாணவி ஒருவர் கழுத்தை நெறித்து கொலை செய்யப்பட்டிருப்பது குறித்து போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டையை சேர்ந்த ஆர்த்தி(18) என்ற இளம்பெண் தஞ்சையில் உள்ள கல்லூரியில் படித்து வந்தார். அவர் தினமும் கல்லூரிக்கு தனியார் பேருந்தில் செல்வது தான் வழக்கம்.
 
அப்படி நேற்றும் கல்லூரிக்கு பேருந்தில் சென்றுள்ளார். ஆனால் அவர் கல்லூரிக்கு செல்லவில்லை. இதனால் பதற்றமடைந்த பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
 
புகாரின் பேரில் போலீஸார் தேடுதலில் ஈடுபட்டபோது, ஆர்த்தி ஒரு கிணற்றில் இருந்து பிணமாக மீட்கப்பட்டார். அவர் கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டிருக்கிறார். அவர் கற்பழித்து கொலை செய்யப்பட்டாரா? அல்லது வேறு எதுவும் காரணமா? என போலீசார் விசாரித்து வருகிறார்கள். இச்சம்பவம் புதுக்கோட்டையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் உண்ணாவிதர போராட்டம்