Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மனைவி மேல் ஆசை கொண்ட நண்பன்; தட்டிக்கேட்ட கணவன் கொலை! – கரூரில் அதிர்ச்சி!

Webdunia
ஞாயிறு, 12 மார்ச் 2023 (13:09 IST)
கரூரில் மனைவியிடம் தகாத முறையில் நடந்து கொண்ட நண்பனை தட்டிக்கேட்க சென்ற கணவரை சக நண்பர்கள் அடித்துக் கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே உள்ள கவுண்டன்பட்டியை சேர்ந்தவர் ராஜீவ் காந்தி. இவரது நண்பர்கள் தில் ரெங்கநாதபுரத்தை சேர்ந்த நவாஸ் மற்றும் பழைய ஜெயங்கொண்டம் பகுதியை சேர்ந்த கருப்புசாமி. நண்பர்கள் இருவரும் அடிக்கடி தனது நண்பரான ராஜீவ் காந்தி வீட்டிற்கு சென்று வந்த நிலையில் அவரது மனைவியும் பேசி பழகியுள்ளதாக தெரிகிறது. இதில் ராஜீவ் காந்தியின் மனைவி மீது நவாஸ் ஆசைக்கொண்ட நிலையில் தனது ஆசைக்கு இணங்குமாறு அடிக்கடி ராஜீவ் காந்தி மனைவிக்கு தொல்லை கொடுத்து வந்துள்ளார்.

இதுகுறித்து ராஜீவ்காந்திக்கு தெரிய வரவே கடந்த 9ம் தேதியன்று பஞ்சபட்டி டாஸ்மாக்கிற்கு நண்பர்களை அழைத்த ராஜீவ் காந்தி, நவாஸிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதில் சண்டை முற்றவே நவாஸும், கருப்பசாமியும் சேர்ந்து ராஜீவ்காந்தியை அடித்துக் கொலை செய்துள்ளனர். இதுகுறித்து ராஜீவ் காந்தி மனைவி அளித்த வாக்குமூலத்தின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீஸார் நவாஸ் மற்றும் கருப்பசாமியை கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments