Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

உதயசூரியனுக்கு வாக்களித்தால் இரட்டை இலையில் விளக்கு எரிகிறதா? அவினாசியில் பரபரப்பு!

உதயசூரியனுக்கு வாக்களித்தால் இரட்டை இலையில் விளக்கு எரிகிறதா? அவினாசியில் பரபரப்பு!
, செவ்வாய், 6 ஏப்ரல் 2021 (11:27 IST)
உதயசூரியனுக்கு வாக்கு அளித்தால் இரட்டை இலையில் விளக்கு எரிவதாக அவிநாசி பகுதியில் திமுகவினர் புகார் கூறியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
இந்தியாவில் உள்ள அனைத்து தேர்தலும் வாக்குப்பதிவு இயந்திரத்தின் மூலம்தான் நடைபெற்று வருகிறது என்பதும் வாக்குப்பதிவு இயந்திரத்தின் நம்பகத்தன்மை குறித்து அரசியல் கட்சி தலைவர்கள் அவ்வப்போது தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள் என்பதும் தெரிந்ததே
 
ஏற்கனவே நடைபெற்ற தேர்தலில் ஒரு கட்சியின் சின்னத்துக்கு வாக்கு அளித்தால் இன்னொரு கட்சியின் சின்னத்தில் விளக்கு எரிவதாகவும் அந்த கட்சிக்கு அந்த வாக்கு பதிவு செய்யப்படுவதாகவும் புகார்கள் கூறப்பட்டன. ஆனால் இந்த புகார் குறித்து தேர்தல் ஆணையம் எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் இது அர்த்தமில்லாத புகார் என்றும் கூறியது என்பதும் குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் இன்று தமிழகத்தில் காலை 7 முதல் வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில் அவிநாசி தொகுதிக்கு உட்பட்ட கனியாம்பூன்டி என்ற தொகுதியில் 312வது வாக்குச்சாவடியில் இதுகுறித்து பிரச்சனை எழுந்தது. அந்த வாக்குச்சாவடியில் உதயசூரியன் சின்னத்தில் ஒருவர் வாக்களித்ததாகவும் ஆனால் அப்போது இரட்டை இலை சின்னத்தில் விளக்கு எரிவதாகவும் வாக்காளர் கூறியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து வாக்குப்பதிவு சிறிது நேரம் நிறுத்தப்பட்டு இயந்திரங்கள் சோதனை செய்யப்பட்டதாக தகவல்கள் வெளிவந்துள்ளன

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கோவையில் ஓட்டுக்கு பணம்; காங்கிரஸ் – நாம் தமிழர் இணைந்து போராட்டம்!