Publish Date: Tue, 19 Jul 2022 (14:18 IST)
Updated Date: Tue, 19 Jul 2022 (14:20 IST)
பிரபல அரசியல் விமர்சகர் சவுக்கு சங்கர் மீது நீதிபதி நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர உத்தரவு பிறப்பித்துள்ளதாக பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் குறித்து சமூக வலைத்தளத்தில் சவுக்கு சங்கர் சர்ச்சைக்குரிய பதிவு செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது
இதனை அடுத்து சவுக்கு சங்கர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு பதிவு செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது
நீதிமன்ற கிளை பதிவாளருக்கு நீதிபதி சுவாமிநாதன் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன
தாமாக முன்வந்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கை பதிவு செய்ததாக நீதிபதி ஜி ஆர் சுவாமிநாதன் அறிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது