Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஆயுதங்களுடன் 'இன்ஸ்டாவில் ரீல்ஸ்' செய்த இளம்பெண் மீது வழக்குப்பதிவு!

vinodhini
, செவ்வாய், 7 மார்ச் 2023 (17:17 IST)
கோவை மாவட்டத்தைச் சேர்ந்த இளம்பெண், சமூக வலைதளத்தில் ஆயுதங்களுடன் ரீல்ஸ் செய்ததாக அவர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

சமூக வலைதளங்கள் மலிந்துள்ள நிலையில், சாதாரண மக்கள் முதல் பிரபலங்கள் வரை பலரும் இதில் கணக்குகள் வைத்து,அன்றாடம் பயன்படுத்தி வருகின்றனர்.

சிலர் இதைத் தேவைக்கேற்ப பயன்படுத்தி தம் திறமைகளை உலகிற்கு தெரியப்படுத்தி வருகின்றனர். ஒருசிலர் தவறான செயல்களின் மூலம் பாதிப்பை ஏற்படுத்தி வருகின்றனர்.

இந்த  நிலையில், கோவை மாவட்டத்தைச் சேர்ந்த வினோதி என்ற பெண் (25) தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில், கையில் ஆயுதங்களுடன், சிகரெட் பிடித்து, மிரட்டல்  பாடலுக்கு வைப் செய்து வீடியோ வெளியிட்டார்.

இதையடுத்து, அவர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்து, அவரைப் பிடிக்க போலீசார் தனிப்படை அமைத்துள்ளனர்.

சமீபத்தில், கோவையில்   நடந்த குற்றச் சம்பங்களை அடுத்து போலீஸார் தீவிரமாகக் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கொரொனா காலத்தில் நடிகைகள் பெயரில் போலி சான்றிதழ்கள் - எதிர்க்கட்சி எம்.எல்.ஏ கேள்வி