Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கரூர் அருகே பண்டைய கால முறைபடி எருது தாண்டுதல் விழா

கரூர் அருகே பண்டைய கால முறைபடி எருது தாண்டுதல் விழா
, வெள்ளி, 28 ஜூன் 2019 (21:11 IST)
கரூர் மாவட்டம் குளித்தலை தாலுக்கா தோகைமலை ஒன்றியம், தேசியமங்கலம் அருகில் தாதில் மாதா நாயக்கா் மந்தை நடுப்பள்ளம் என்ற ஊரில் ஜக்கம்மாள் என்ற நாயக்கா் குலம் தெய்வமான கோவிலில் காளை மாடு மாலை தாண்டும் திருவிழா நடைபெற்றது. 
14 நாயக்கா் மந்தையை சோ்ந்த 500க்கும் மேற்பட்ட மாடுகள் கலந்து கொண்டது. இதில் போட்டிக்கு 112 மாடுகள் கலந்து கொண்டது. 2 கிலோ மீட்டா் தொலைவில் இருந்து மாடுகளை விரட்டுவார்கள் கோவில் அருகில் மாலை போன்று வெள்ளை வேட்டியை குறுக்கே பேட்டு வைப்பார்கள் அந்த மாலையை தாண்டும் முதல் மாடு வெற்றி மாடு. அவ்வாறு வெற்றி பெற்ற எரமாகி நாயக்கா் மந்தையை சோ்ந்த மாடு புதூா் முதலிடத்திலும், அய்யாசாமி நாயக்கா் மந்தையை சோ்ந்த மாடு கோடங்கிப்பட்டி இரண்டாம் இடத்தையும் வெற்றி பெற்றது. பின்னா் பரிசுகள் வழங்கப்பட்டது. அடுத்ததாக ஊர் உள்ள அனைத்து நாயக்கா்களும் ஒன்று சேர்ந்து உறு சத்தத்துடன், தப்பாட்டம் நாயக்கா் பாரம்பரிய தேவராட்டம் நிகழ்ச்சி நடைபெற்றது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சினிமாவை மிஞ்சும் ஆணவக் கொலை : மகளை வெட்டிக் கொன்ற தந்தை !!